Monday 25 May 2015

ஆலையடிவேம்பு மக்கள் மட்டும் மௌனம் காப்பது ஏன்..

வி.சுகிர்தகுமார்,..
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் இலங்கையின் பல்வேறு திசைகளிலும் கண்டனப்பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும்போது அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு மக்கள் மட்டும் மௌனம் காப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

பல்வேறுபட்ட பெண்கள் அமைப்புக்களும், சமூக தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பாடசாலைகளும். இங்கு வாழும் மக்களும் சற்றேனும் உணர்வின்றி செயற்படுவது வேதனை தருவதாக சில வயது முதிர்ந்தவர்கள் முணுமுணுப்பது காதினில் அவ்வப்போது கேட்கின்றது.


கடல்கடந்த உறவுகளுக்கு அநீதி இழைக்கப்படும் போது அம்பாரை மாவட்ட மக்கள்; குரல் கொடுக்கின்றனர். ஆனால் நமது மண்ணில் நடந்த அநியாயத்திற்கு அமைதியாகவுள்ளனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
வடக்கில் வெளிப்படையாக நடந்தேறியுள்ள இச்சம்பவம் போல் கிழக்கில் மறைமுகமாக நடைபெற்றுள்ள சில சம்பவங்களையும் மக்கள் மறந்துவிடக்கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் சில சமூகப்பெரியோர்களிடம் பேசிய போதிலும் யாரும் செவிசாய்க்கவில்லை என குறிப்பிடும் சில இளைஞர்கள், வெறுமனே அரசியலுக்கு மட்டும் அறிக்கைகள் விடும் அம்பாரை மாவட்ட அரசியல்வாதிகள் பலர் இதற்கு மட்டும் ஊமையானது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை பூனைக்கு மணிகட்டுவது யார் என்பதை எதிர்பார்த்தே பலரும் காத்திருப்பதான செய்திகளும் வெளியாகின்றது.
எது எவ்வாறாயினும் வித்தியா மரணம் தொடர்பில் புத்தளத்தில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் சகோதர சமூகங்களும் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுவரும் இவ்வேளை அம்பாரை மாவட்ட மக்கள் மாத்திரம் மௌனியாக மாறியுள்ளமை எந்த அளவிற்கு பொருத்தம் என்பதை அவர்களது நெஞ்சில் கைவைத்து அறிந்து கொள்ளட்டும்.

இதேவளை...

ePq;fs; NgrhjpUg;gJ epahakh? vDk; jiyg;gplg;gl;l Jz;L gpuRuk; MiyabNtk;gpd; gy;NtW gFjpfspYk; ,d;W Nghlg;gl;Ls;sd.

No comments: