Saturday 28 February 2015

திருக்கோவில் பிரதேச கலாச்சார மண்ணபம் திறப்பு விழா!

Vadivel Dinesh

இன்று காலை 10.30 மணியாவில் திருக்கோவில் பிரதேசத்திற்கான கலாச்சார மண்டபம் கலாச்சார அமைச்சர் திரு டி.பி ஏக்கநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்படவுனள்ளது (மேலதிக செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள் )

Wednesday 18 February 2015

கடத்தப்பட்டு காணமல் போய் உள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

 காணமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு இனிய பாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
 

 கடந்தகால யுத்தத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் கடத்தப்பட்டு காணமல் போய் உள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியும்   இவர்களை முன்னாள் ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும்  கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பு.புஸ்குமார் (இனிய பாரதி)யினால் கடத்திச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் இனிய பாரதிக்கு எதிராக திருக்கோவில் தம்மிலுவில் பொதுச்சந்தை கட்டிடத்துக்கு முன்னால் இன்று புதன் கிழமை(18) பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்




      
இதில் திருக்கோவில் தம்பிலுவில்  ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பனங்காடு வினாயகபுரம்  போன்ற பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பாரதியே நீ கடத்திச் சென்ற என் மகன் என்கே? சீலன் பிடித்துச் சென்ற  பிள்ளைகள் எங்கே? அடக்கு முறையால் அழித்து விட்டீரே எம் மக்களை அரசே? அடைத்து விடு பாரதியை சிறையில். இவ்வாறு பல்வேறு சுலோகங்கள் தாங்கிய வண்ணம் காணாமல் போன உறவுகள் கண்ணீர் மல்க அழுது புலம்பியதுடன் இனிய பாரதியின் முன்னாள் காரியாலயமாக அமைந்திருந்த  தம்பிலுவில் குருகுல வீதியில் உள்ள வீட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகவும் நிலம்,மலசல கூட குளிகளைத் தோண்டி ஆராயுமாறும் எலும் பூக்கூடுகளையாவது மீட்டுத்தருமாறும் அதுவரைக்கும் அவ் வீட்டுப்பகுதிக்கு
 பொலிஸ்பாதுகாப்பு வழங்கி சேதனையிடுமாறு  கோரிக்கை அடங்கிய மகயர் ஒண்றினையும் உதவி பொலிஸ் உத்தியோகத்தரிடம் த.தே.கூ. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கலையரசன் இணைந்து டி.கே.ஹேமந்த விக்கோவிட்டவிடம் கையளித்தனர் 

Tuesday 17 February 2015

நேரலை பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நன்றி!

இவ் நிகழ்விற்கு பேருதவி நல்கி எம் பெருமானின் அருளை உலகறியச்செய்ய உதவிய ஆலய நிர்வாக சபையினருக்கும் நண்பர்களுக்கும் இணையத்தள ஊடகவியலாளர்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் நேரலையின் போதான திருப்திகர தன்மையினை  உடனுக்குடன் தெரிவித்து  உதவிய உலக வாழ் தமழ் மக்களுக்கும் இதனை மீழ் ஒலிபரப்புச் செய்த  Batti Fm .com  ( நிறுவனர் உதயகாந்த்)  Alayadivembunews.com நிறுவனர் டினேஸ் ,  Thampiluvil.info நிறுவனர் (நத்தனன்)   ஆகியயோருக்கு நன்றி !

மகா சிவராத்திரி பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் இருந்து நேரலையாக ...

பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் இருந்து......

Sunday 15 February 2015

ஆலையடிவேம்பு பிரதேசத்தினை பிரதினிதித்துவப்படுத்தும் வேட்பாளரை தெரிவு செய்யும் நிகழ்வு

எதிர் வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில்   தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஆலையடிவேம்பு பிரதேசத்தினை பிரதினிதித்துவப்படுத்தும் வேட்பாளரை தெரிவு செய்யும் நிகழ்வு கூட்டமைப்பின் பொத்துவீல் தொகுதி செயலாளர் ம.காளிதாசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆலையடிவேம்பு கலாச்சாரமண்டபத்தில்  இடம் பெற்றது


இதில் இப் பிரதேச அனைத்து இந்து ஆலயம்களின் அறங்காவல் சபை உறுப்பினர்கள் மாதர் சங்கம்கள் விளையாட்டுக் கழகங்கள் வர்த்தக சங்க உறுப்பினர்கள் இளைஞர் கழகம்கள் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் பொதுமக்கள் என பிரதேசத்தின் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பொது வேட்பாளரினை தெரிவு செய்தனர்



அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தினை பிரதினிதித்துவப்படுத்தும் முகவாகவும் தலைமை வேற்பாளராகவும்  க.கோடிஸ்வரன் செய்யப்பட்டுள்ளார் இவ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் உப தவிசாளர்  சியாம்சுந்தர் கூட்டமைப்பின் பொத்துவீல் தொகுதி செயலாளர் ம.காளிதாசன் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரனம் வழங்கும் நிகழ்வில்

அம்பாறை மாவட்ட திராய்கேனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நம்பிகை ஒளியின் ஸ்தாபனம் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரனம் வழங்கும் நிகழ்வில் ஸ்தாபன கிழக்குமாகண பனிப்பாளர் ஜெயசிறில் மாகாண சபை உறுப்பினார் எம்.இராஜேஸ்வரன் ஊடகவியலாளர் சகா தேவராயா மாணவருக்கு வழங்கிவைப்பதை  காணலாம்





Monday 9 February 2015

அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தில் தூக்கில் இட்டு மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்

அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு மகாசக்தி கிராமத்தில் 30வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான தங்கவேலு இராஜேந்திரா (853294829) இன்று (10) செவ்வாக்கிழமை காலை அவரது வீட்டில் தூக்கில் இட்டு மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

face book அவசர தகவல் அனைவரும் பகிருங்கள்...!


அவசர தகவல் அனைவரும் பகிருங்கள்...!

எச்சரிக்கை..!! எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! நேற்று முதல் பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)


பேஸ்புக்கில் உலா வரும் எவ்வித ஆபாச பதிவுகளையும் க்ளிக் செய்யாதீர்கள், தற்சமயம் ஆபாச பதிவுகளில் இருந்து மால்வேர் ஒன்று பரவி வருவதாகவும் இது வரை சுமார் 110,000 பயனாளிகள் இதன் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.

Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.
# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when anyone logs into your account from a new device or browser. -> அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம். Settings -> Security Settings -> Trusted Contacts ->
இதில் ஐந்து நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள் டைம்லைனில் தெரியாது. Settings -> Timeline and Tagging Settings -> who can add things to my timeline? -> Review posts friends tag you in before they appear on your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
எனக்கு தெரிந்த அளவு செட்டிங் கொடுத்துள்ளேன் மேலும் விளக்கம் தெரிந்தார்கள் கமெண்ட்ஸ் செய்யுங்கள். நன்றி.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் நான் பேசிய வரைக்கும், அவர்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ, அந்த பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை. ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற முடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை ஹாக் செய்வதாக நினைக்கிறேன். முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில் ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே History Cleaning செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும் பயன்படுத்தலாம்.


இந்த மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டால், இது தானாகவே உங்களது நண்பர்களின் பக்கங்களிலும் பதிவை போஸ்ட் செய்யும். கவலை வேண்டாம், எவ்வித பேஸ்புக் மால்வேர்களையும் எளிதாக விரட்டியடிப்பது எப்படி என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு அருள்மிகு ஸ்ரீ சித்தி வினாயகர் தேவஸ்தான 1008 மகா சங்காபிசேக பெருவிழா

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு அருள்மிகு ஸ்ரீ சித்தி வினாயகர் தேவஸ்தான 1008 மகா சங்காபிசேக பெருவிழா  (09) திங்கட்கிழமை ஆலய குரு சிவஸ்ரீ.சிவகீர்த்திகுருக்களால் பங்சாராத்தி காட்டப்படுவதை     


fhzyhk;