Thursday 25 February 2021

ஐ.நா உயர் ஸ்தானிகரின் முடிவுகள், பரிந்துரைகளை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பு!!

Riya
இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும் பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்...

Riya
க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை காரியாலம் மற்றும் பிராந்திய காரியாலயங்கள் நாளை (26) திறக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday 24 February 2021

புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Riya

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் 
நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் திடீர் சோதனை....

Riya

அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

உழுந்து உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தல்....

Riya

உழுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உழுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு, வவுனியா மாவட்டக் கமக்காரர் ஒழுங்கமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


Tuesday 23 February 2021

வவுனியாவில் சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் ஊழியர் வாயிலின் முன்பாக இன்று (24) காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Riya

சுகாதார ஊழியர்களை புறக்கணிக்காதே எமது உரிமைகளை எமக்கு வழங்கு என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் புதிய அறிவிப்பு

Riya

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களுடன் ஒருவர் கைது

Riya

பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தின் கண்டுபிடிப்புக்களுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டு

Riya



பாதுகாப்பு செயலாளரும் தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) பிடிபனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலையத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்த உயர் மட்ட அதிகாரிகாரிகளை அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரேணுகா ரோவேல் (ஓய்வு) வரவேற்றார்.

முன்பள்ளிக்கு சென்ற மாணவி விபத்தில் படுகாயம்

மட்டக்களப்பு நகரில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளிக்கு சென்ற மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வடமாகாணசபை முன்னாள் முதல்வர்க்கும் இந்திய உயர்ஸ்தானிகர்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

Riya


தமிழ்மக்கள் தேசியகூட்டணியின் தலைவரும் வடமாகாணசபை முன்னாள் முதல்வருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது இந்திய-இலங்கை உறவு குறித்து கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணம் உட்பட இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தினார்.

கின் கங்கையில் குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள்

காலியில் உள்ள கின் கங்கையின்  நீர் ஓட்டத்தை தடைசெய்யும் வக்வெல்ல பாலத்தின் கீழ் தேங்கிய  குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் அண்மையில் ஈடுபட்டனர்.

இதற்கமைய  பாலத்தின் கீழ் குப்பை கூளங்களால்  ஏற்பட்ட அடைப்பு கடற்படையின் சுழியோடிகள் மற்றும் மரைன் குழுவினரால்  இணைந்து  அகற்றப்பட்டது.

நீரோட்டத்தில் படிப்படியாக முறையற்ற வகையில் சேரும் குப்பைகள், முறிந்து விழுந்த மரங்கள், மூங்கில் புதர்கள் என்பன  பாலத்தின் கீழ் தேங்குவதனால் ஆற்று நீர் தடையின்றி ஓடுவதற்குத் தடை ஏற்படுத்துகிறது.

கிந்தோட்டையில் கடலுடன் சங்கமிக்கும்  கின் கங்கையின் இயல்பான நீரோட்டம் வக்வெல்ல மற்றும் தெமட்டகொட  பாலங்களின் கீழ் தேங்கும் குப்பைகூளங்கள் காரணமாக தடைபடுவதனால் இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அதனை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி.....

Riya

இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனியார் துறையை விட போட்டி விகிதத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் வாங்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர்

 Riya

தலவாகலை கிறேட்வெஸ்டன் கல்பா டிவிசனில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய எட்டு பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே இன்று (23) காலை 10 மணியளவில் தேயிலை செடியினுள் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய 6 பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

#கொழும்பு பங்குச் சந்தை 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தம்

Riya
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று (23) மதியம் 1.28 தொடக்கம் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

S&P SL20 சுட்டெண் 147 புள்ளிகள் அல்லது 5% சரிந்த காரணத்தால் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 307 புள்ளிகளால் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Friday 12 February 2021

1000 ரூபாய் வேதன அதிகரிப்பை ஏற்கோம் - சிறுதோட்ட உரிமையாளர்கள் அறிவிப்பு



பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு, வேதன நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும், தனியர் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளகல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மாவட்ட ரீதியில் பரீட்சை நிலையங்களை அமைப்பதற்கு பரீட்சை திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

2020 ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விருது வழங்கல் விழாவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'லீடர்ஷிப் வித் டிஸ்டிங்க்ஷன்'



பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (10) நடைப்பெற்ற 2020 ம் ஆண்டிற்கான இலங்கையின் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களின் விருது வழங்கல் விழாவில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா 'லீடர்ஷிப் வித் டிஸ்டிங்க்ஷன்' (மேம்பாட்டிற்கான தலைமைவம்) என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Tuesday 9 February 2021

இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள்


 

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச் சிறிய செயற்கைக் கோள்கள் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

ராமேஸ்வரத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ்ஜோன் இந்தியா மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து மாணவர்களுக்கு செயற்கைக் கோள்களை உருவாக்கும் பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அளித்து வந்தன.

Tuesday 2 February 2021

8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

அரச சேவையில் மேலும் 8,500 பயிற்சி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளாகி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள காணியில்லாத மக்களை துரிதமாக மீள குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விசேட போக்குவரத்து ஒழுங்கு

       73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் ஒத்திகை நடவடிக்கைகளினால் கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் இன்றும் (02) விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று (01) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமது நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக, நாடாளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Monday 1 February 2021

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையந்த மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடையந்த மாணவர்களை வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளுக்கு இணைத்து கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று (01) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த காலங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போதும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக சுமார் 60 வரையான தொண்டராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.