Thursday 31 May 2018
Wednesday 30 May 2018
கண்டிய மன்னரின் மானியம் பெற்ற பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி
(ஹிருஸ்மன்) கண்ணகி வழிபாட்டிற்குப் பிரசித்தி பெற்ற இலங்கையின்
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பனங்காடு,
பட்டிநகரில் குடிகொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி
திருக்குளிர்ச்சி மகோற்சவம் நேற்று (29) பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியவர்களின்
பிரசன்னத்துக்கு மத்தியில் நடைபெற்றது.
Monday 28 May 2018
வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர்
யாழ் செய்திகள்:யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் இனந்தெரியாத குழுவொன்றினால் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Thursday 24 May 2018
ஆலையடிவேம்பில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்
அம்பாறை
மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் 3,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தர
தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கோரிக்கைக்கு அமைவாக
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் அரசாங்கத்தினால்
முன்னெடுக்கப்படவுள்ளது.
Sunday 20 May 2018
Thursday 17 May 2018
(செ.துஜியந்தன்)
இம்முறை மட்டக்களப்பு – அம்பாறை ஆகிய மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கையில் ஈடுபட்டவர்கள் நஷ்டத்திற்குள்ளாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.
கடந்த வருடங்களைப் போன்று இவ் வருடமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டிருந்தது. இவற்றில் இருந்து அறுவடை மிகக் குறைந்தளவிலே கிடைத்திருந்தன. இதனால் இம்முறை முந்திரியம் பழம் விற்பனையும் அமோகமாக நடைபெறவில்லை.
கிரான், வாகரை, ஆரையம்பதி, செங்கலடி, புதுக்குடியிருப்பு, தாழங்குடா, கிரான்குளம், திருக்கோவில் பெரியநீலாவணை போன்ற பகுதிகளில் முந்திரியம் மரங்களில் பூக்கள் கருகிவிட்டது. அத்துடன் மரமுந்திரியில் ஈடுபட்டபலர் அச்செய்கையை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான ஊக்குவிப்புக்கள், நஷ்ட ஈடுகளை வழங்க சம்பந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மரமுந்திரிச் செய்கையாளர்கள் பாதிப்பு!
Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka
haran
Monday 14 May 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடாத்தினோம். ஆனால் இவ்வருடம் இந்நிகழ்வினை சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். 17ம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத் தலைவர் டினேஸ்காந்த் தெரிவித்தார்.
Sunday 13 May 2018
Saturday 12 May 2018
Friday 11 May 2018
Thursday 10 May 2018
Subscribe to:
Posts (Atom)