Sunday 17 May 2015

சிங்கர் பிளஸ் காட்சியறை மீது சனிக்கிழமை(16) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பொத்துவில் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிங்கர் பிளஸ் காட்சியறை மீது சனிக்கிழமை(16) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 பொத்துவில் பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள சிங்கர் பிளஸ் காட்சியறையின் கண்ணாடியிலான கதவுகள் இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 இருப்பினும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: