Monday 30 December 2019

சட்டவிரோதமாக மண் அகழ்ந்


(பாறுக் ஷிஹான்)
டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் இருவரை சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wednesday 25 December 2019

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல்



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) புதன்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

காட்டு யானைகள்  அடடாகாசம் 

haran


அம்பாறை லாகுகல வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள நிருவாக எல்லைக்குட்பட்ட பொத்துவில் கோமாரி மற்றும் செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்குள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் படையெடுத்த காட்டு யானைகள் மதிகள் மற்றும் பயிர்களை நாசம் செய்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கங்கண சூரிய கிரகணம்!


கங்கண சூரிய கிரகணம்!


கங்கண சூரிய கிரகணம்’ நாளை இடம்பெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை, இலங்கையில் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்குமென இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக

haran


அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவருவது,

Sunday 22 December 2019

மரண_அறிவித்தல்

🍀🍀🍀🍀#மரண_அறிவித்தல் 🍀🍀🍀🍀
அக்கரைப்பற்று சின்னபனங்காட்டை" சேர்ந்த
அமரர். சின்னத்தம்பி புண்ணியமூர்த்தி காலமானார்.
மலர்வு 1936/07/24 🌸 உதிர்வு 2019/12/21

Friday 20 December 2019

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது. 

haran


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பொதுமகன் இருவரால் சரமாரியாக தாக்கப்பட்டமையை தொடர்ந்து இன்று சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது.

Tuesday 17 December 2019

மீண்டும் மழை


(வி.சுகிர்தகுமார்)  
அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

Wednesday 4 December 2019

பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே பத்திரிகையாளர்கள் மீதான துன்புறுத்தல்கள்-எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு


 



 பதவியேற்ற பின்னர் தேடுதல்கள், விசாரணைகள்,அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Friday 22 November 2019

தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு

haran
தெல்லிப்பழை மருத்துவ சிகரத்திற்கு பாராட்டு 
 

 


யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக    வைத்திய அத்தியட்சகராக  கடமையாற்றிய வைத்தியர் யோ .திவாகர் தனது   எம்.டி.மருத்துவ நிர்வாகம் உயர் படடப்படிப்பை  மேற்கொள்ளவுள்ள செல்வதற்கான   பிரியாவிடை நிகழ்வு     நேற்று முன்தினம்  இடம் பெற்றிருந்தது 

மூத்த ஊடகவியலாளர் காலமானார்

haran


மூத்த ஊடகவியலாளர் காலமானார்

மட்டக்களப்பின் பத்தரிகைத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் அவர்கள் நேற்று 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார் இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

Thursday 14 November 2019

266 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை  

haran


ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து 266 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை தந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயரதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

தேர்தல்.....பாடசாலைகள் பொறுப்பேற்பு

haran



2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளாக உபயோகப்படுத்த நாட்டிலுள்ள சில பாடசாலைகள் இன்றைய பாடசாலை நடவடிகைகள் முடிந்ததும் அந்தந்த கிராம சேவையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

ஒருவர் பொல்லால் தாக்கி கொலை 

haran


மட்டக்களப்பு – வாழைச்சேனை, கண்ணகிபுரம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.


மனைவியுடனான வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கணவர் தனது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதனைத் தடுக்கும் நோக்கில் மனைவி, தனது கணவனை பொல்லால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலின் போது காயமடைந்த 16 வயதான மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

Wednesday 13 November 2019

பாலியல் துஸ்பிரயோகம்

haran


(பாஷி)
வீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கல்முனை நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

Monday 7 October 2019

ஒருவர் கொலை

haran
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


விபத்தில் ஒருவர் பலி

haran

(பாறுக் ஷிஹான் )
தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

Monday 30 September 2019

விபத்தில் உயிரிழ ப்பு

அம்பாறை - பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் தங்கராசா சாயிதாசன், நேற்று (29) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

Monday 16 September 2019

பணிப்பகிஷ்கரிப்பு

haran
வி.சுகிர்தகுமார்
இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று நாடளாவிய ரீதியில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sunday 15 September 2019

எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு

எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நாளை கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு அழைப்பு
--க-சரவணன்-

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணிக்கு கிழக்கு மக்கள் தங்களது முழு ஆதரவினை தெரிவிக்குமுகமாகவும் பேரணியை வலுவூட்டுமுகமாகவும் அன்றைய தினம் 16 ம் திகதி திங்கட்கிழமை  கிழக்கு முழுவதிலும் பூரண கதவடைப்பினை மேற்கொள்ளுமாறு கிழக்கு மக்களிடம் தமிழ் மக்கள் பேரவையின் கிழக்குக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது

Friday 13 September 2019

கைக் குண்டொன்றை

haran
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணியிலுள்ள தனியார் தென்னந் தோட்டத்தில் இருந்து நேற்று (12) கைக் குண்டொன்றை மீட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

Friday 30 August 2019

அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா



வி.சுகிர்தகுமார்  

 அம்பாரை மாவட்டத்தில் இந்து பௌத்த மக்களால் போற்றி வழிபடப்படும் அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா செவ்வாய்க்கிழமை  இரவு (27) சிறப்பாக நடைபெற்றது.

Thursday 22 August 2019

விவசாயிகளுக்கு பயிற்சி

ஜே.எப்.காமிலா பேகம்-

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்  திட்டத்தின் கீழ் Tom ETC. இன மாங்கன்றுகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு, பசளையிடல் மற்றும் கத்தரித்தல் தொடர்பான பயிற்சிகள், நேற்று  (22) வழங்கப்பட்டது.

Monday 19 August 2019

அடிப்படைத் திறன் அபிவிருத்தி




(ரவிப்ரியா)

அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை சார்பான விருந்தோம்பல் பயிற்சியின் முதற்கட்டத்தை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ட்ரீட்டு விடுதியில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். நளீம் தலைமையில் வெள்ளியன்று காலை (16)நடைபெற்றது, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்து கொண்டார்.

இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து

haran

Monday, August 19, 2019


தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகம் வெற்றிக் கிண்ணத்தினைத் தட்டிக் கொண்டது.


 1 ads


(இ.சுதாகரன்)


துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்த இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

Friday 9 August 2019

ஆலையடிவேம்பில் 25 கோடி




(வி.சுகிர்தகுமார்)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

குண்டு மீற்பு



(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு வவுணதீவு முந்தானைவெளி பிரதேசத்து வயல் வெளியில் கைவிடப்பட்ட ஆர் பி. ஜி. ரக குண்டு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

Wednesday 7 August 2019

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது


  முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது



(வி.சுகிர்தகுமார்

சிறிய வேதனத்துடன் அதிக சேவையினை புரியும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாதுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் தெரிவித்தார்.

Tuesday 9 July 2019

வயலுக்குள் பாய்ந்த பஸ் ; மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்



பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Tuesday 4 June 2019

பாலஸ்தாபனம்



அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான பாலஸ்தாபன கும்பாபிஷேக

நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 04ம்  திகதி இடம்பெறவுள்ளது

Wednesday 22 May 2019

2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு..


அரச சேவையாளர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

Monday 20 May 2019

நீரில் மூழ்கி பலி

க.விஜயரெத்தினம்
  
அம்பாறை களுவாஞ்சிக்குடி பெரியகல்லாறு, கடல்நாச்சி அம்மன் ஆலயத்துக்கு எதிரே உள்ள நீரோடையில், நண்பர்களுடன் இணைந்து செல்பி எடுத்தவாறு நீராடிய இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

haran
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப் பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் ஏ. பகீரதன் தெரிவித்தார்.

Saturday 18 May 2019

சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Niloch.K


முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையுடன் நடைபெற்றது .

தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டு யுத்தம் நிறைவுக்கு வந்த நாளான 2009 மே 18 ஆம் திகதியன்று தமிழ் மக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக வருடம் தோறும் நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில் நாட்டில் அவசரக்கால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் படையினர் மற்றும் புலனாய்வாவார்களின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியில் இம்முறையும் முள்ளிவாய்க்கால் தமிழின பேரவல நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றன.

சிறப்பாக இவ்வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் (வடக்கு கிழக்கு ) ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நேர்த்தியாக நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது 

அந்த வகையில் இன்றைய தினம் தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்துத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்துகிடப்பதை கூட அறியாது அந்த தாயின் மார்பில் பால் குடித்தும் அவ்வேளையில் தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மக்களோடு மக்களாக நின்று உயிரிழந்த உறவுகளுக்காகச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மக்கள் உணவாக உட்கொண்டு பசிபோக்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ,சிவமோகன் ,சிவசக்தி ஆனந்தன் ,சாள்ஸ் நிர்மலநாதன் ,செல்வம் அடைக்கல நாதன் , முன்னாள் மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் , சிவநேசன் ,ஐங்கரநேசன் ,முன்னாள் மாகாசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் ,ரவிகரன் ,கமலேஸ்வரன் ,புவனேஸ்வரன் ,சயந்தன் .கஜதீபன் ,யாழ் மாநகர மேஜர ஆர்னோல்ட் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் , தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .

அம்பாறையிலும் கண்ணீர்மல்க இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Niloch.K 


அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மே18 முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டிய தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீர்மல்க தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவேந்தல் நிகழ்வானது அம்பாறை மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தலைமையில் திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றன.

இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு தாய்மார் கண்ணீர்மல்க மெழுகுவர்த்திகள் ஏற்றி உயிர்நீத்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் தாய்மார்கள் கலந்து கொண்டதுடன் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கே.ஜெயசிறில் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலிகளை செலுத்தினர்.



வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு

Niloch.K
புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது.
கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்க ரத்ண தேரர் மகிழ்ச்சியுடன் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றார்.
அதாவது விசேடமாக தமிழ் சிங்கள மக்கள் ஒன்றாக சேர்ந்து இப்பிரதேசத்தில் இந்நாளை கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.
இப்பிரதேச வெளிச்சகூடுகளை பொருத்தி தருபவர்கள் தமிழ் மக்கள் ஒன்றியம் ஆகும்.அதற்காக பெருமைப்படுகின்றேன்.கல்முனை பிராந்தியத்தில் பௌத்த கொடி வெசாக்கூடு முதற்தடவையாக கட்டப்படுவது வரலாற்றில் முதல்தடவையாகும்.மக்கள் சந்தோசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இங்கு வாழ்கின்றார்கள்.புத்த பகவானின் அந்த 3 அம்ச வாழ்க்கை வரலாற்றை ஞாபகப்படுத்தும் கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் சந்தோசமாகவும் அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் கடந்த 21 ஆம் தினம் இடம்பெற்ற அசாதாரண நிலைமையை அடுத்து மிகவும் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது.இதற்கு எமது முப்படையினருக்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் எல்லோரும் சமாதானமாக வாழ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என கூறினார்.
மேலும் முப்படையினரின் பாதுகாப்புடன் வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரின் வழிகாட்டலில் கல்முனை தமிழ் இளைஞர்கள் இன ஐக்கியம் கருதி மேற்படி அலங்காரத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



N

மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

Niloch.K
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது.



கொளுத்தும் வெய்யிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்து, இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்காக கண்ணீர் மல்க உணர்ச்சிபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.



நாட்டில் தற்பொழுது நடக்கும் அசம்பாவிதங்களை பொருட்படுத்தாது மக்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வந்து படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைந்துருகி அஞ்சலி செலுத்தியமையை காணக்கூடியதாக இருந்தது.





யாழ் பல்கலை மாணவர்களுக்கு ஓர் மிக முக்கிய அறிவிப்பு…! 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் விரிவுரைகள்…!!

NILOCH.K



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களு க்கான கல்விநடவடிக்கைகள் யாவும் எதிர்வரும்22.05.2019 (புதன்) ஆரம்பமாகவுள்ளன என்று பதிவாளர் வி. காண் டீபன்அறிவித்துள்ளார்.
கலைப்பீடம்(இராமநாதன்நுண்கலைப்பீடம்உட்பட), விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிகபீடம், விவசாயபீடம், பொறியியற்பீடம், தொழில்நுட்பபீடம், ஆகிய பாடங்களுக்கும் சித்தமருத்துவ அலகுக்குமான கல்வி நடவடிக்கைகளே எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.கடந்த ஏப்ரல்21 ஆம் திகதி முதல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளில் மருத்துவபீடம் தவிர்ந்த ஏனையபீடங்கள் அனைத்துக்குமான பரீட்சைகள் எதிர்வரும்27 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பமாகி நடைபெறவுள்ளன.
விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை எதிர்வரும்21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திரும்புமாறும், விடுதி களின் உள்ளேயும், பல்கலைக்கழகத்தின் சகல பகுதிகளிலும் மாணவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம் ஒன்றினை எடுத்து வரவேண்டும் என்றும் பதிவாளர் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.