Thursday 30 January 2020

மாடுகள் அறுக்கத் தடை...



பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதன்கிழமை தொடக்கம் (29ஆம் திகதி) மறு அறிவித்தல் வரை, மாடுகள் அறுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tuesday 28 January 2020

12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்

haran



கொரோனா வைரஸ் தொடர்பில் முகம்கொடுக்கு அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கியதாக, 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Thursday 23 January 2020

பாரிய மரம் வீழ்ந்துள்ளது.


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று(23) அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியின் அர்ச்சனா திரையரங்கிற்கு முன்பாக வீதி அருகில் இருந்த பாரிய மரம் வீழ்ந்துள்ளது.

Wednesday 22 January 2020

மகாபொல புலமைப் பரிசில்

haran

Thursday, January 23, 2020

மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம்!


 23 ads
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும்.
haran

Wednesday, January 22, 2020


கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு தேசிய தூய்மை உற்பத்தி விருது!


 220 ads
 (எம்.என்.எம்.அப்ராஸ்)
சுகாதார சேவையில் சிறந்த சேவையை மேற்க்கொண்டதன் மூலம்
கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு "தேசிய தூய்மை உற்பத்தி விருது" - 2019 க்கான விருது வழங்கும் "(national cleaner production awards 2019) விருது விழாவில் வெண்கல விருது மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கலாநிதி ஏ.எல்.எப்.ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வானது நேற்று (21) கொழும்பில் (WATERS EDGE Hotel )இடம்பெற்றது.

சுகாதார சேவை வளங்கள் நிறுவனங்களினாலும் மற்றும் ஏனைய தொழில் சார் நிறுவனங்களாலும் விண்ணப்பிக்கப்பட்ட பலரது விண்ணப்பங்களுக்கு மத்தியில் சுகாதார சேவை வளங்கள் பிரிவில் கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த
வைத்தியசாலை அதிக மதிப்பெண் பெற்று தெரிவு செய்யப்பட்டிருந்தது .

இது தொடர்பாக வைத்திய அத்தியட்சகரை கெளரவிக்கும் வைபவம் வைத்தியசாலை நிர்வாகத்தினாரால் இன்று( 22) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது இவ் விருது இது தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப் .ரகுமான் எப்போதும் எமது வைத்தியசாலை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க காத்திருக்கிறது.

இவ் விருதானது இப் பிராந்தியத்துக்கும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் இது பெறுமதி சேர்த்துள்ளது. உங்கள் அனைவரின் அயராத முயற்ச்சியினால் எமது வைத்தியசாலைக்கு இப்படியான விடயங்கள் இடம்பெறுகின்றது.

இந்த விருதினை பெற்றுக்கொள்ளவும் எமது சேவையினை தரமாக வழங்கவும் உறுதியாக செயற்படும் எமது அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தனது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

அத்துடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் வைத்திய அத்தியட்சருக்கு நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

இதேவேளை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் கடந்த வருடம் (2019) ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது-2019”வழங்கும் நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு தேசிய மட்டத்தில் வெள்ளி விருது (silver award) கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.







கல்முனை அஷ்ரப் ஞபாகர்த்த வைத்தியசாலைக்கு தேசிய தூய்மை உற்பத்தி விருது! Rating: 4.5 Diposkan Oleh: Office

Sunday 19 January 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் உயர்த்த வேண்டும்

haran

( நூருல் ஹுதா உமர் )
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் "பீ " நிலையிலிருந்து தரம் "ஏ "நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற தேவையை உணர்ந்து சுகாதார அமைச்சும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும், கிழக்கு மாகாண சபையும் இணைந்து அதற்கான பணிகளை மக்களின் விருப்பத்தின் பேரில் துரித கதியில் முடித்து தரமுயர்வு கடிதத்தை நேரடியாக உங்கள் காலடிக்கு வந்து விரைவில் வழங்க தயாராக இருக்கிறேன் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

விளைச்சலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பண்டி


(அஸ்ஹர் இப்றாஹிம் )
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கிலுகிலுப்பான் எனும் ஒருவகை பண்டிச் சம்பா நெல் இனம் ,பயிரிடப்பட்டுள்ள பிரதான நெல் பயிருடன் போட்டியிட்டு வளர்ந்து விளைச்சலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Sunday 12 January 2020

பனங்காடு வைத்தியசாலை 24 மணிநேரமும் இயங்கும்....

haran


கடந்த பல தசாப்தங்களாக தரமுயர்த்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டதுடன் 13 கிராம மக்களின் கோரிக்கையாகவும் தேவையாகவும் இருந்த அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு வைத்தியசாலை புதிய அரசாங்கத்தின் அதிரடி செயற்பாடுகள் காரணமாக தரமுயர்த்தப்பட்டது.

Friday 10 January 2020

ஓநாய் சந்திர கிரகணம் இன்று இரவு 10.38 முதல்


இந்த வருடத்துக்கான முதலாவது சந்திர கிரகணம் இன்று(வெள்ளிக்கிழமை) திகதி நிகழவுள்ளது.
ஓநாய் சந்திர கிரகணம் என நாசாவினால் பெயரிடப்பட்டுள்ள இந்த சந்திர கிரகணம் பகுதியளவிலேயே தென்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Saturday 4 January 2020

பெண் ஊழியருக்கு ஓங்கி அறைந்த சம்பவம்-நடந்தது என்ன?

பெண் ஊழியருக்கு ஓங்கி அறைந்த சம்பவம்-நடந்தது என்ன?
(பாறுக் ஷிஹான்)
பெண் உத்தியோகத்தருக்கு அவரது தலைமை உத்தியோகத்தரான ஐ.எல்.எ காலிர்க் .  அறைந்த சம்பவத்தால்அம்பாறை மாவட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.