அக்கரைப்பற்று
அருள்மிகு மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் நான்காம்நாள்
திருவிழாவின் விசேட சங்காபிஷேகப் பூஜைகளைச் சிறப்பிக்கும்வகையில் இன்று (30) காலை இடம்பெற்ற
பாற்குட பவனியானது ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி
ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நாதஸ்வரம், தவில் வாத்திய இசை முழங்க மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்
ஆலயத்தைச் சென்றடைந்தது.
Monday 29 August 2016
அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா
இலங்கை
திருநாட்டின் கிழக்கு மாநிலத்தில் அம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம்-தீர்த்தம் ஆகிய
மகத்துவங்களோடு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்
திருத்தலத்தில் துர்முகி வருடத்தின் ஆவணித்திங்கள் 10 ஆம் நாளான கடந்த 26-08-2016
வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவத்தினைச்
சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழாவானது மஹோற்சவத்தின்
மூன்றாம் நாளான நேற்று (28) உமை மைந்தன் வேழமுகத்து விநாயகனின் அருளோடு
வெகுசிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.
Thursday 25 August 2016
ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகளும் பெற்றோரும் பங்குபெற்ற போஷாக்கு வழிகாட்டல் கருத்தரங்கு
மகளிர்
மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் சிறுவர் செயலகத்தின் போஷாக்கு
வழிகாட்டல் கருத்திட்டத்துக்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான வழிகாட்டல் கருத்தரங்கொன்று இன்று (25)
காலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் பணிமனையில் இடம்பெற்றது.
Wednesday 24 August 2016
Tuesday 23 August 2016
Friday 19 August 2016
தோல்வியையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை மைதானங்களே ஏற்படுத்துகின்றன - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
பாடசாலைகளில்
தமது ஆரம்பக்கல்வியைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் முன்னர் சின்னஞ்சிறார்களைச்
சமூகத்தோடு இணைக்கும் முக்கிய பணியினை முன்பள்ளிகளே செய்கின்றன. ஆடல், பாடல்,
விளையாட்டுக்கள் என சிறுவர்கள் ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து ஒன்றாக ஈடுபடும்போது
அங்கே சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு, தோழமையுணர்வு, புரிந்துணர்வு என்பன உண்டாகி
அவர்கள் தாம் வாழும் சமூகத்துக்கு இலகுவாக இயைபடையக்கூடிய நிலைமைகள் உண்டாகின்றன
என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் குறிப்பிட்டார்.
Friday 12 August 2016
Thursday 11 August 2016
Tuesday 9 August 2016
Monday 8 August 2016
கற்ற கல்வியை மட்டுமல்ல, கற்றுக்கொண்ட திறனையும் ஒருவரிடமிருந்து அழிக்கமுடியாது - பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்.
பசியோடிருப்பவனுக்கு
மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுங்கள் என்று நம் மூதாதையர்கள்
சொன்னதற்கு ஏற்றாற்போல வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து
பாடசாலைக் கல்வியை முடித்த பெண் பிள்ளைகளுக்கு தையற்கலைப் பயிற்சிகளை
வழங்குவதன்மூலம் அவர்களது குடும்பங்கள் கௌரவமான ஒரு தொழில் செய்து தமது
ஜீவனோபாயத்தைக் கொண்டு நடாத்த உதவிபுரியும் இவ்வாறான தொழிற்பயிற்சிக் கூடங்கள் அரச
சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்னும் பல
தோற்றுவிக்கப்படவேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன்
தெரிவித்தார்.
Friday 5 August 2016
Monday 1 August 2016
நிலைமாறுநீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம்
நிலைமாறு காலகட்ட நீதிப் பொறிமுறை மற்றும் தேசிய நல்லிணக்கம், சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஊடகங்களின் வகிபங்கு
குறித்து கிழக்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் வதிவிட செயலமர்வானது 30 (சனிக்கிழமை), 31 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களும் கல்முனை சூப்பர்ஸ்டார் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
Subscribe to:
Posts (Atom)