Monday 18 May 2015

முகாமையாளர் வீட்டில் திருட்டு

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோளாவில் பிரதேசத்தில் வசிக்கும் அருந்ததி மகேஸ்வரன் என்பவரது வீட்டிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று, கோளாவில் பிரதேசத்தில் திவிநெகும முகாமையாளர் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு பெறுமதியான பொருட்கள் உள்ளிட்ட பணம் திருடப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, பெறுமதிமிக்க ரோச், அலைபேசி, உண்டியல், புதிய சிம்காட், உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: