Tuesday 26 May 2015

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் கைது

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோளாவில் பிரதேச வடிகான் ஒன்றிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் தாய் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரை திங்கட்கிழமை (25) இரவு கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு, கோளாவில் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22) வடிகான் ஒன்றிலிருந்து தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட நிலையில் ஆண் சிசுவொன்றை அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கண்டெடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார் இதனையடுத்து பொலிஸார், குறித்த சிசுவை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுவர் பராமரிப்புப் பிரிவில் ஒப்படைத்துள்ளனர்
.கைது செய்யப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: