கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Saturday 20 May 2017
Friday 19 May 2017
முன்பள்ளி அபிவிருத்தித் தர நியமங்கள் தொடர்பாக அதன் ஆசிரியைகளைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு
மகளிர்
மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர் செயலகத்தினால் இலங்கையில்
முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தித் தர
நியமங்கள் தொடர்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலைகளின்
ஆசிரியைகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று (18) காலை ஆலையடிவேம்பு பிரதேச
செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Tuesday 16 May 2017
Tuesday 9 May 2017
ஆலையடிவேம்பில் பனை உற்பத்தியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு
ஆலையடிவேம்பு
பிரதேசத்தில் பனை உற்பத்திகளில் ஈடுபடும் நலிவுற்ற தொழிலாளர்களுக்கான வாழ்வாதார
உதவிகளை வழங்கும் நிகழ்வு இன்று (09) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றது.
Monday 8 May 2017
Thursday 4 May 2017
சிரேஷ்ட அறிவிப்பாளர் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வயதில், இன்று (04) காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று (04) காலமானார்.
1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் செல்வி. சற்சொரூபவதி நாதன் இன்று (04) காலமானார்.
1937 ம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக இவர் அறியப்படுகிறார்.
Wednesday 3 May 2017
சுமார் 10 பவுண் தங்கநகைகள் காளி கோவிலில் திருட்டு
திருக்கோவில், விநாயகபுரம் கிராமத்திலுள்ள காளி கோவிலில் சுமார் 10 பவுண் தங்கநகைகள் திருட்டுப் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கோவிலின் கருவறைக் கதவு திங்கட்கிழமை (2) இரவு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணியப்பட்டிருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. அட்டியல், தோடு, தங்கச்சங்கிலி உள்ளிட்ட நகைகளே திருட்டுப் போயுள்ளன.
Subscribe to:
Posts (Atom)