Saturday 27 December 2014

பிரதேச கலை இலக்கிய விழா 2014


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் தினைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இனைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா இன்று(27) சனிக்கிழமை காலை 09.00மணிக்கு கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் இடம் பெறுகி்ன்றது








பிரதேச கலை இலக்கிய விழாவில் பல்துறை சார்ந்தோர்களான கா.தேவசிகாமணி-(முறிவுவைத்தியம்) சி.குழந்தைவடிவேல்-(ஆன்மீகம); ப.தங்கவேல்-(பூசகர்;) இ.நடராஜன்-(ஊடகம்) வ.அமராவதி-(சமூகசேவை) ஆகியோர்கள் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசனால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளதை  காணலாம் 

Friday 26 December 2014

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி..

news by-- .வரதராஜ்

அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது தம்பிலுவில் பெரிய

முகத்துவாரத்தில் அமைந்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபியின் முன்னால் 2014.12.26


வெள்ளிக்கிழமை காலை 9.05 மணியளவில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் பதிவாளரும்

ஆசிரியருமான எஸ்.வரதராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின்

ஆலோசகரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ்.குணபாலன் அவர்களும்

அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 50 இற்கும் மேற்பட்டோர்

இந் நிகழ்வில் கலந்து கொண்டணர். இப் பகுதியில் பெய்து வருகின்ற அடைமழை மத்தியிலும் சுனாமியால் உயிர்

நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் பூக்கள் மற்றும் ப+மாலை அணிவித்து தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை

சிறப்பம்சமாகும்.

Wednesday 24 December 2014

தொடர்சியாக பெய்துவரும் அடைமழையின் தாக்கத்தினால் அம்பாரை மாவட்டத்தின்


 திருக்கோவில் பிரதேசத்தில்---
 சின்னத்தோட்டம், பாலக்குடா, காயத்திரிகிராமம், வினாயகபுரம் , மூனையூர் பகுதிகளும்
 Displaying 26012013(047).jpg 
Displaying SN850776.jpg

Displaying 11012011(002).jpg
ஆலையடிவேம்பு பிரதேசத்தில்---
 பெரியகுளம், வாச்சிக்குடா, கோளாவில் சுனாமி வீட்டுப்பகுதி ,தீவுக்காலை, நாவட்காடு, பனங்காடு வட்டமடு பகுதிகளும்

 அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை , இறக்காமம் , நிந்தவூர் , காரைதீவு ,ஒலுவில் , பாலமுனை , பொத்துவில் பாகுதிகளிலும் தொடர்சியாக தற்பொழுதும் மழை பெய்து வருகின்றதுடன் பல விவசாய காணிகளும் 
 வெள்ள நீரில் மூழ்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது


 இதே நேரம் கிராமசேவை அதிகாரிகள் , சிவில் பாதுகாப்புக்குளுக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்



குறிப்பாக ஆதிவாசிகள் கிராமமான  அளிக்கம்பை பகுதிக்கான  பிரதான  போக்குவரத்து பாதையான சாகாமம்-அக்கரைப்பற்று வீதியின் மொட்டையாகல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் வடிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

Monday 8 December 2014

இரத்ததான நிகழ்வு

கிழக்கு பிராந்திய  சத்திய சாயி நிலையங்களினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு
Displaying SN850451.JPG

Displaying SN850444.jpg
 அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட காரைதீவு திருக்கோவில் அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு சாயி நிலையங்களின் ஒருங்கினைப்பில்  (29)சனிக்கிழமை காலை-09.00மணிக்கு ஆலையடிவேம்பு சத்திய சாயி மண்டபத்தில் இடம் பெறுகின்றது

Monday 17 November 2014

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் பூனாகலை விஜயம் !


News By :
V.Dinesh (Akkaraipattu)

அண்மையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு நிற்கதியாக்கப்பட்ட பதுளை, மீரியப்பெத்த அகதிகள் தங்கியிருக்கும்  பூனாகலை தமிழ் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிற்கு கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தது. 






ஒன்றியத்தின்                          தலைவர்
வி.ரீ.சகாதேவராசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயமானது மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் காரைதீவு கிளையின் உறுப்பினர்களும் இதன்போது இணைந்து பாத்திக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் , ஆறுதல்களையும் தெரிவித்திருந்தனர்.

  
இம்மக்களுக்காக  மனிதாபிமான உதவிகளான  நிவாரண பொதிகளையும் , சிறுவர்களுக்கான உடு துணிகளையும் கையளித்திருன்தனர்.

இவ்விஜயத்தின் போது மண்சரிவால் பாத்திக்கப்பட்ட குறித்த இடத்தினை சென்று பார்த்த ஊடகவியலாளர்கள் அடங்கிய இக்குழுவினர் இவ்விடத்தில் மண்ணுக்குள் மறைந்து உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியினை செலுத்தியதுடன், அங்கிருந்து இல்லாமல் போன ஆலயத்தின் உடைந்த நிலையில் காணப்பட்ட முனியாண்டி சிலையினையும் பார்வையிட்டிருந்தனர். 



சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்து அனர்த்தத்திற்கு உள்ளாகாத மக்களையும் சந்தித்து உரையாடி அவர்களுக்கும் நிவாரண பொதிகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Sunday 16 November 2014

இலவச கல்விக்கருத்தரங்கு .




அம்பாரை  மாவட்ட சிவில் பிரைஜைகள் சமூகத்தினர் நடாத்தும்  க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு .


2014ம் ஆண்டு  க.பொ.த சாதாரணதர பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக்கருத்தரங்கு அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகள் சமூகத்தினரால்  2014-11-06  இன்று ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பமானது இதன்படி ஏ.எல் றிஸ்வான் ஆசிரியர் அவர்களின் விஞ்ஞான பாடமானது செயல்முறை ரதியாகவும் இலகுவான முறைகளிலும் மாணவர்களுக்கு பெறுமதி மிக்கவகையில் வழங்கப்பட்டது .


இக்கருத்தரங்கில் திருக்கோயில் வலயத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளைச்சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதன்போது அம்பாரை மாவட்ட சிவில் பிரஜைகளில் ஆலோசகரும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆலோசகருமான விரிவுரையாளர் எஸ்.குணபாலன் அம்பாரை மாவட்ட  சிவில் பிரஜைகளில் சமூகத்தின் பதிவாளர் எஸ்.வரதராஜன் மற்றும் பாடசாலை அதிபர் எஸ் விஸ்வநாதன் பிரதி அதிபர் எஸ் .பி.நாதன் போன்றேர்கள் கலந்து கொண்டனர்.



Friday 14 November 2014

ஆலையடிவேம்பில் திருடர்கள் கைவரிசை

ஹரன் 

ஆலையடிவேம்பு திவுக்காலை பகுதியில் பெண் ஒருவரின் பெறுமதிஉடைய தங்க தாலிக்கொடியினை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.
Displaying IMAG0001.JPG

தீவுக்காலை ஆலைய வீதியைச் சேர்ந்த 64 வயதுடைய வைரமுத்து அந்தோனியம்மா   இன்று வெள்ளிக்கிழமை காலை
வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள குறுக்கு வீதியில்  முருங்கை  இலை பறிப்பதற்காக சென்று கொண்டிடுந்த போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிடுந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த தாலிக் கொடியினை அபகரித்த திருடர்கள் தப்பி ஓடினர்.

இவரின் கூக்குரல் கேட்ட வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் திருடர்களை பிடிக்க முற்பட்ட போதும் அவர்கள் தப்பித்துவிட்டனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளினை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு


vd;.`ud;
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்ப் பாட்டில் (14)  பிரதேச கலாச்சார மண்டபத்தில் 
Displaying SN850002.jpg Displaying SN850003.jpg Displaying SN850004.jpgDisplaying SN850001.jpg
 பொது மக்களுக்கான தொற்றா நோய் சம்பந்தமான விழிப்புனர்வு கருத்தரங்கினை சுகாதார வைத்திய அதிகாரிடொக்டர்.ஏ.ம்.முநொளப்பர் நடாத்துவதனையும் கலந்து கொண்டோரையும்  காணலாம்

Thursday 13 November 2014

நாமல் கோளாவில் விஜயம்

 News.V.Dinesh (Akkaraipattu)

மஹநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்ப ஆலையடிவேம்பு கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தை  விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வானது இன்று மாலை 3.00 மணியளவில் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது .

இவ்விழாவிற்கு கௌரவ அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்  புதல்வரும்இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் வருகைதந்து  புதிதாக புனரமைக்கப்பட்ட மைதானத்தை திறந்து வைத்தார்.




Tuesday 11 November 2014

பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பருட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

ஹரன்

அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பருட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று(12) புதன் கிழமை காலை 10.00 மணிக்கு அதிபர் கே.ஜெயந்தன் தலைமையில் இடம் பெறுகின்றது



இவ் நிகழ்வில் திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராயன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் கோட்டக்கல்வி அதிகாரி வா.குனாளன் உட்பட மாணவர்களது பெற்றோர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.   

நாமல் ராஜபக்‌ஷ கோளாவில் பொது விளையாட்டு மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்

என்.ஹரன்


இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ நாளை புதன் கிழமை 01.30 மணிக்கு ஆலையடிவேம்பு கோளாவில் பொது விளையாட்டு மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்

காந்தி விளையாட்டு கழக தலைவர் நா.நாகேந்திரன் தலைமையில் இடம் பெறும் இவ் நிகழ்வில் கற்றலில் வென்ற கோளாவில் முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் மங்களவிளாவும் சிறப்பாக இடம் பெறவுல்ளது  பிரதம அதிதிகளாக அம்பாரை பிரிவினா வண.ஏ.கே.சந்திரிய தேரர் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்
  

நாளை திறந்து வைக்கப்படவுள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு தேற்றம் தற்பொளுதும் மும்முரமாக வேலைகள் இடம் பெறுவதனை படம்களில் கானலாம்

Thursday 6 November 2014

ஆலையடிவேம்பு நாவற்காடு கிராம வீதிகளை புனரமைப்பு செய்து தாருங்கள்

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு

என்.ஹரன்

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமண்றத்தின் அனுசரனையில் நடாத்தப்பட்டு வருகின்ற அறநெறி பாடசாலை மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு 


பனங்காடு பாசுபதேசுவர வித்தியாலயத்தில் இன்று 07.11.2014  மாலை 04.00 மணிக்கு இடம் பெறவுள்ளது


யானையின் தக்குதலில் விவசாயி பலி

ஹரன்

ஆலையடிவேம்பு  பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தோனிக்கல் இரண்டாத்துக்
கப்பு பகுதியில் தனது வயல் நிலத்திற்கு இரவு காவல் கடமையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த ஆறுமுகம் இராசதுரை (ராசா) 55 வயதுடைய விவசாயி 590983233வி
நேற்றிரவு (04 செவ்வாய்க்கிழமை) யானையின் தக்குதலில் பலியானார்.


பனங்காடு வைத்தியசாலை வீதியினை சேர்ந்த மூண்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இப் பகுதியில் தொடர்சியாக யானையின் தாக்குதல் இடம் பெற்று வருவதும்,
பகுதியினை அன்மித்துள்ள சாந்திபுரம் கிராம குடியிருப்பு வீடுகள்
முழுவதும் யானையின் தாக்குதலால்  சேதமாக்கப்பட்டிருப்பதும்
குறிப்பிடத்தக்கது.

Tuesday 4 November 2014

சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை

ஹரன்
தேசிய மொழிகள் திட்டத்தின் திருகோனமலை மாவட்டத்தினைச் சேர்ந்த  கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினர் நேற்று(04) செவ்வாக்கிழமை அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை நிறுவன நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் த.விஜயகுமார் ஆரம்பித்து உரையாற்று வதனையும் கலந்துகொண்ட கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினரினையும் படத்தில் கானலாம்






Friday 17 October 2014

தனவந்தர் ஒருவரினால் பாடசாலைப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு

அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தனவந்தர் ஒருவரினால் பாடசாலைப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இன்று (11) காலை நடைபெற்றது.
Displaying P1070446.JPG

Displaying P1070453.JPG 
Displaying P1070463.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸின் வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் அவரது நண்பரும், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியில் குடியுரிமை பெற்று அந்நாட்டின் Braunenstr நகரில் வசிப்பவரும், Aalen நகரில் தொழில்புரிபவருமாகிய தில்லைநாயகம் முரளிதாசன் என்ற தனவந்தரால் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 17 விசேட தேவையுடைய மாணவ மாணவிகளுக்கு இவ்வன்பளிப்புகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் குறித்த பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம், விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி, ஆசிரியை பி.தீபரேகா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர், குறித்த தனவந்தரின் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன், இவ்வுதவியைத் தமது மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோன்று விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி தனது உரையில், குறித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரது முயற்சியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் ஒரு தனவந்தரால் கடந்த வருடமும் இதேபோன்றதொரு நிகழ்வில் தமது மாணவர்களுக்குப் பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின்கீழ் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையூடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு அவ்வீடுகளுக்கு மாற்றீடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் கல்வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முதல் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை (03) காலை இடம்பெற்றன.

Displaying SAM_3013.JPG Displaying SAM_3081.JPG
Displaying SAM_3056.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களுக்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாகக் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.குணநாதனும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் எம்.சி.சம்சுதீன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, கிராம உத்தியோகத்தர் ஏ.சுபராஜ் மற்றும் திவிநெகும பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வாச்சிக்குடா, கோளாவில் ஆகிய கிராமங்களில் புதிய கல்வீடுகளை அமைப்பதற்கான அடிக்கற்கள் அதிதிகளால் நட்டுவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அரசினால் தனக்கு ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் ரூபாய் நிதியில் தற்போது அமைக்கப்பட்டுவரும் இவ்வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிதி குறித்த வீடுகளைப் பூரணமாக அமைத்து முடிப்பதற்குப் போதுமானதாக இல்லாதுவிடினும் காலாகாலமாக குடிசைகளில் வசிக்கின்ற வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் பெரும் கனவான கல்வீடு என்ற ஆசையினை நிறைவேற்றும் முதல் அடியை இவ்வேலைத்திட்டத்தினூடாகத் தான் எடுத்துவைத்துள்ளதாகவும் அங்கு தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமொன்று

கடந்த ஒக்டோபர் 1 இல் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமொன்று இன்று, 13-10-2014 திங்கட்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.Displaying DSCN4275.JPG

Displaying DSCN4219.JPG
Displaying DSCN4232.JPG Displaying DSCN4241.JPG 
Displaying DSCN4262.JPG Displaying DSCN4271.JPG
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்திற்கு பிரதேச செயலாளர் தலைமையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, திவிநெகும திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைபவத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்துப் பாலர் பாடசாலை சிறார்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஒழுங்குசெய்த கலை, கலாசார நிகழ்வுகள் அதிதிகளதும் பார்வையாளர்களதும் பலத்த கரகோஷங்களையும் பாராட்டுக்களையும் பெற்றன.
இதன்போது இவ்வைபவத்திற்குச் சமுகமளித்த அனைத்து சிறார்களுக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் இனிப்புப் பொதிகளும், கலை, கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அதிதிகளின் சிறுவர் தினச் சிறப்புரைகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.