Friday 27 November 2015

2000/= ரூபா அபராதம்...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பகுதியில் 18வயதிற்கு குறைந்த சிறுவர் ஒருவருக்கு புகையிலை (கோலிப் சிகரெட்) விற்பனைசெய்த வர்த்தக கடை உரிமையாளருக்கு     இன்று (27) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று  நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.ரசீத் 2000/= ரூபா  அபராதம் விதித்து  தீர்ப்பளித்தார்.

இதே வேளை திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர்களுக்கு தலா 10000 /=பத்தாயிரம்  ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிதிருந்தமை குறிப்பிடத்தக்கது 

சிறுதொழில் முயற்சியாளர்களை அறிவூட்டும் பயிற்சிக் கருத்தரங்கு

(தியாஷினி)

ஆலையடிவேம்பு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி (திவிநெகும) அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுதொழில் முயற்சியாளர்களை அறிவூட்டும் பயிற்சிக் கருத்தரங்கொன்று இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சட்டவிரோதமாக மதுமானம் விற்பனை 15,000 ரூபாய் அபராதம் ..

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் 15,000 ரூபாய் அபராதம் நேற்று வியாழக்கிழமை விதித்தார். மேற்படி நபர் சாராய விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

Wednesday 25 November 2015

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 90வது ஜனன தினம்




பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 90வது ஜனன தினமான இன்று(23) 

அம்பாறை  அக்கரைப்பற்று சாயி சமித்தியில் இடம் பெற்ற விசேட பஜனை நிகழ்வில் பாபாவிற்கு மங்கள ஆரார்த்தி காண்பிக்கப்படுவதையும்



 கலந்து கொண்ட சாயி பக்தர்களையும் கானலாம் 

இந்தியப் பெண்ணொருவருக்கு 10,000 ரூபாய் அபராதம்

இலங்கைக்கு சுற்றுலா விஸாவில் வந்து  புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட இந்தியப் பெண்ணொருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன்  10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.   அத்துடன், வியாபாரத்துக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை அரசு உடைமையாக்குமாறும் பொலிhhருக்கு நீதவான் உத்தரவிட்டார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தப் பெண் கல்முனை, பாண்டிருப்புப் பிரதேசத்தில் 

சட்டவிரோதமாக 62 மதுபானப் போத்தல்

அக்கரைப்பற்று, சாகாமம் வீதி வழியாக முச்சக்கரவண்டியில் சட்டவிரோதமாக 62 மதுபானப் போத்தல்களை கொண்டுசென்ற  குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டிச் சாரதியை செவ்வாய்க்கிழமை (24) இரவு கைதுசெய்ததுடன், அம்முச்சக்கரவண்டியுடன் மதுபானப் போத்தல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அக்கரைப்பற்றிலிருந்து பனங்காடுப் பிரதேசம் நோக்கி சந்தேகத்துக்கிடமான முறையில்; சென்றுகொண்டிருந்த இம்முச்சக்கரவண்டியை வழிமறித்து சோதனை செய்தனர். இதன்போது, முச்சக்கரவண்டிக்குள் மதுபானப் போத்தல்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். போயா தினத்தில் கூடிய விலைக்கு மதுபானத்தை விற்கும்; நோக்கிலேயே சந்தேக நபர் மதுபானப் போத்தல்களை கொண்டுசென்றிருக்கலாமெனத்; தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் இன்று புதன்கிழமை  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இலங்கையில் எச்3.என்2 இன்புளுவன்சா

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் எச்3.என்2 இன்புளுவன்சா பரவி வருவதாக தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசகரும் மருத்துவருமான டொக்டர் சி.ஜே.எஸ்.ஜயமஹா தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், 200 நோயாளர்களிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் இதில் 50 பேருக்கு இந்த வைரஸ்  தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்று, வருடத்துக்கு இரண்டு முறை ஏற்படும். மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய காலப்பகுதியிலும் டிசெம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதிகளிலும் இந்த வைரஸ் தொற்று ஏற்படும்.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் என்று குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், காய்ச்சலின் முதல் நாளிலேயே அரச வைத்தியசாலையில் அல்லது தகுதியான வைத்தியரிடம் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவது அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இளைஞர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நாள்பட்ட சுகயீனங்கள், அதாவது இருதயநோய், நீரிழிவு மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய் உள்ளவர்களும், இது குறித்து மருத்துவ சிகிச்சையை உடனடியாக பெறவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வைரஸ் தொற்றுக்கு, ஏனைய தொற்றுக்களைப் போல, மூக்கு வடிதல், தொண்டை வலி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடற்தசை வலி போன்றவை ஏற்படும்.
சனநெருக்கடியான இடத்தைத் தவிர்த்தல், அலுவலகம் அல்லது வெளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் போது கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவுதல், எதிரே உள்ளவர்களின் சுவாசம் படும்படியாக பேசுவதை தவிர்த்தல், முகத்துக்கு முகமூடி அணிதல் அல்லது இருமும் போது வாய்க்கு துணி வைத்துக்கொள்ளல் போன்றவற்றைச் செய்வதன் மூலம், இந்த வைரஸ் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Tuesday 24 November 2015

பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் மின்னல் தாக்கும் என்றும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 







thank you...www.tamil mirror.lk

Friday 20 November 2015

பிறந்தநாள் வாழ்துக்கள்

பிறந்தநாள் வாழ்துக்கள்

வரவு-செலவுத்திட்டம்,...2016..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்படுகின்றது.

தொடர்தும் இணைந்திருக்க....


04:36 PM - சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக தெற்காசிய பொருட்களைக் கொள்வனவு செய்து, இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். 
04:36 PM - நாடாளுமன்றத்துக்கு அண்மையில் சர்வதேச கண்காட்சி மத்திய நிலையத்தை நிறுவுவேன்
04:35 PM - விருந்தோம்பல் துறையுடன் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற இளைஞர்களுக்கு பயிற்சிப்பாடம் அறிமுகப்படுத்தப்படும். ஆகக்கூடுதலாக 15,000 ரூபாய் பெறுமதியான பாடத்திட்டத்துக்கு அரசாங்கம் 50 சதவீதம் செலுத்தும். 
04:33 PM - சர்வதேச சந்தைக்கொள்ளைக்கு அமைவாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முறைமையை இன்னும் வெற்றிகரமாக்குவதற்கு 2016ஆம் ஆண்டு முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை எதிர்பார்க்கின்றோம்.
04:32 PM - கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரசாங்கக் காணிகளில் வீடுகளை நிர்மாணித்து குறைந்த விலையில் வழங்குவதற்கான முறைமை மேற்கொள்ளப்படும். அதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு கடன் வழங்கப்படும். 
04:30 PM - உருக்கு, ஓடுகள், மாபிள் ஓடுகள் மற்றும் மலசலகூட உபகரணங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும். 
04:29 PM - கட்டட மற்றும் நிர்மாண பயிலுநர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
04:28 PM - நிர்மாணப் பணிகளுக்கு பயன்படுத்த இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கான வரி விலக்களிக்கப்படும்.
04:27 PM - நிர்மாணப்பணிகளுக்காக வருகின்ற வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.
04:26 PM - வீடு, சொத்துகளுக்கான வரம்மை ஏற்படுத்துவதற்காக சட்டத்தில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் கொண்டு வரப்படும். 
04:25 PM - புதிய கிராம வீட்டுத்திட்ட  முறைமை உருவாக்கப்படும். அதற்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். வீடொன்றுக்கு 03 இலட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.
04:21 PM - சேரிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 15 இலட்சம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
04:20 PM - பயன்படுத்தப்படாத காணிகளானது வீடுகள் நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
04:20 PM - காணிக்காக வங்கி உருவாக்கப்படும்.
04:20 PM - ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிகளை நிறுவுவதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி. 
04:18 PM - இறக்குமதி அபிவிருத்திக்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
04:17 PM - உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவரப்படும்.
04:17 PM - எரிபொருள் சந்தை உருவாக்கப்படும். 
04:17 PM - புதிய இறக்குமதிப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு முதலீட்டு ஊக்குவிப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.
04:04 PM - வெளிநாட்டவர்களுக்கு குத்தகை அடிப்படையில் காணி வழங்கப்படும்போது, அறவிடப்படும் வரி விலக்களிக்கப்படும்.
04:04 PM - போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
04:02 PM - யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 03 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும். 
04:00 PM - ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்.
04:00 PM - அரச நிறுவனங்கள் அனைத்தையும்  2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 
03:59 PM - மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:58 PM - தங்கம் இறக்குமதிக்கான 50 உரிமப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவேன்.
03:58 PM - மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.
03:55 PM - அலங்காரமீன் கைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்.
03:53 PM - வவுனியாவில் புதிய பொருளாதார வலயம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.
03:52 PM - கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தணிக் கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.
03:48 PM - பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர் செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்.
03:47 PM - தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:47 PM - தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயமாக்கப்படும்.
03:45 PM - உள்ளூர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட புதிய சந்தைக்கு கோழிகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 

03:44 PM - மீனவர்களின் காப்புறுதிக்காக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:44 PM - உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். 400 பக்கெட்டின் ஆகக் குறைந்த சில்லறை விலை 325 - 295 வரை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்
03:42 PM - உள்ளூர் பால் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன். எனினும், பால் விலை கூடியதுடன், யோக்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன.
03:41 PM - பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.
03:40 PM - நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
03:39 PM - விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.
03:36 PM - 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப் பாவனையினால் சிறுநீரக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன.
03:36 PM - அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.
03:34 PM - கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா  நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி ஒரு கிலோகிராம்  65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
03:33 PM - விவசாய அறுவடையின் போது, விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்.
03:32 PM - புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.
03:31 PM - பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்
03:30 PM - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
03:29 PM - பெரும் வணிக நிறுவனங்களின் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - மிளகாய், செத்தல் மிளகாய், கிழங்கு உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் ஊடாக நாட்டை தன்னிறைவு வடிவத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
03:29 PM - விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது, வரி நிவாரணங்கள் வழங்கப்படும்.
03:28 PM - புதிய விவசாயக் கொள்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர்  கவனம் செலுத்தியுள்ளனர்.
03:27 PM - நிகர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக இணைந்த கூட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
03:26 PM - சிறு பொருளாதாரத் தோட்டங்கள் மொனராகலை, புத்தளம், யாழ்ப்பாணம், வன்னி உட்பட பல இடங்களில் முன்னெடுக்கப்படும்.
03:25 PM - சகல நிதி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட அதிகார சபையின் கீழ் வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு  செய்துகொள்ள வேண்டும்.
03:24 PM - சிறு மற்றும் மத்தியதர வர்த்தகர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
03:23 PM - வரவு  -செலவுத்திட்டத்தின் யோசனைகளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைக்கின்றார்.
03:23 PM - இன, மத, சமூகத் தடைகளைத் தாண்டி அனைத்து மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்போம்.
03:22 PM - இருளை சபிக்காமல், மெழுகுவர்த்தியை ஏற்றி இருளை விரட்டியடிப்போம்.
03:21 PM - நாங்கள் முன்வைத்த நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதி செய்கின்றோம். அதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் தலைமை தாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.
03:19 PM - யாழ்ப்பாணத்தில் வீதியொன்றை உருவாக்குவதற்கு டட்லி சேனநாயக்கவினால் யோசனை முன்வைக்கப்பட்டபோது, மக்கள் ஒரு பிடி அரிசி வழங்கி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர்.
03:18 PM - சூரியசக்தி மற்றும் வாழ்க்கை அடிப்படையிலான மின்சாரம் தொடர்பில் அந்தந்த பிரிவுகள் பயன்படுத்தப்படவேண்டும்.
03:16 PM - வயதானர்களுக்கு சுகாதாரத்திட்டங்கள்.
03:16 PM - வீதிகளில் போகின்ற மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து, வாகனங்களின் எண்ணிக்கை கூடுவதற்கு, பொதுப் போக்குவரத்து சேவையில் தற்போது இருக்கின்ற நிலைமை காரணமாக அமைந்துள்ளது.
03:13 PM - வேகமாக அதிகரித்து வருகின்ற புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
03:09 PM - மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் முறைமையை மீண்டும் உருவாக்க வேண்டும்.
03:08 PM - ஓய்வூதியம் பெறும் மக்களின் தேவைக்கான சேமிப்பு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
03:07 PM - ஆக்கபூர்வமான ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.
03:05 PM - இளைஞர்களுக்கு வேலையின்மை மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு, பட்டதாரிகளின் ஏற்றத்தாழ்வு இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
03:05 PM - கடந்த அரசாங்கத்தின்போது, கல்விக்கான முதலீடு குறைந்திருந்தது.
03:04 PM - 72 சதவீத மட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரத்துக்கு மிக அதிகமாக உள்ளது.
03:02 PM - அரச கடன் தற்போது 72 சதவீத மட்டத்துக்கு இருக்கின்றது.
03:00 PM - சம்பளச் செலவு கணிசமானளவு அதிகரித்துள்ளது.
03:00 PM - அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவு ஆகியவற்றை ஓரளவுக்கு உயர்த்தி எங்களுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.
02:59 PM - பொருளாதார வரவு - செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு பூச்சியக் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது. இதனை செயற்படுத்துவதற்கு இவ்வளவு காலம் எடுத்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன்.
02:56 PM - பூச்சிய வரவு-செலவுத்திட்ட கோட்பாடு பல நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றது.
02:54 PM - வரி சீர்திருத்த செயன்முறையினூடாக அரசாங்கத்தின் அடிப்படை வீதத்தை ஈடுசெய்வதற்கு முடியாது.
02:54 PM - ராஜபக்ஷ நிர்வாக முறைமையின் ஊடாக நாங்கள் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.
02:52 PM - பொருளாதாரப் பேரழிவு நிலைமை நிரம்பி வழிந்தது. இச்சந்தர்ப்பத்திலேயே இந்த வரவு - செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு நாங்கள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டோம்.
02:52 PM - வரிப்பணம் நாட்டின் முன்னேற்றத்துக்காக மிகக் கவனமாக பயன்படுத்தப்படவேண்டும்.
02:49 PM - தீர்வு காணமுடியாத இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.
02:48 PM - புதிய அரசாங்கம் உருவாகிய பின்னர் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் பல முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
02:48 PM - இலங்கை அரசியலில் புதிய அரசியல் ஏட்டைப் புரட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
02:47 PM - மக்களின் சிறு பிரிவினர் தேசிய வருமானத்தில் கூடுதலாக அனுபவிக்கின்றனர் என்று புலனாகின்றது.
02:46 PM - சட்டச் செயல்முறைகள் தொடர்பில் எதிர்பார்த்திருக்குமாறு தேசபக்த மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
02:45 PM - கடந்த அரசாங்கத்தின்போது வரி ஆதாய மட்டம் குறைந்தமையினால், இலங்கையில் வரி பொருளாதரம் சீர்குலைந்தது.
02:44 PM - பொருளாதாரத்தில் பல்வேறான ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. கடந்த அரசாங்கத்தில் நெடுஞ்சாலைகள், விமான நிலையம் போன்றவற்றுக்காக கூடுதலான வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டது. இந்தச் செலவுகளுக்காக கூடுதலான செலவும் செய்யப்பட்டது.
02:43 PM - தேவையான பொருளாதார மேம்பாடுகளை விடுத்து, பொருளாதார சுபீட்ச யுகத்தை நாட்டில் உருவாக்குவதற்கு கடந்த அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் இருந்தது.
02:42 PM - ஜி.எஸ்.பி. சலுகை இலங்கைக்கு இல்லாமல் போனது.
02:42 PM - சில அரசியல்வாதிகளி்ன் நகைச்சுவை காரணமாக இலங்கை சங்கடமான நிலைக்கு முகங்கொடுத்தது.
02:40 PM - அரசின் அடிவருடிகள் அரசியல்வாதிகளினால், தெற்கில் சுற்றுலா ஹோட்டலில் வைத்து சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டவரை படுகொலை செய்தமையினால், நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இதனால், பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்தது.
02:37 PM - புதிய சிந்தனையினால் பொருளாதாரம் மீண்டும் இலங்கையை நோக்கி வந்தது.
02:36 PM - அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் தேசிய பாதுகாப்பை எப்போதும் அலட்சியப்படுத்த மாட்டோம் என்பதுடன், தேசிய பாதுகாப்புக்காக ஆகக்கூடிய அர்ப்பணிப்பைச் செய்வோம்.
02:35 PM - கடும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து சிறையிலிருந்த மக்களின் யுகத்துக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
02:34 PM - நாளுக்கு நாள் அதிகரித்துள்ள கடன் சுமை  காரணமாக மக்கள் எதிர்பார்த்திருந்த தங்களின் மேம்பாட்டுக்கான பொருளாதாரம் கிடைக்கவில்லை.
02:33 PM - பயங்கரவாதிகளின்  இருண்ட யுகத்துக்கு 2009ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
02:33 PM - 2004ஆம் ஆண்டு ஆட்சி மாறியதினால் எதிர்பார்த்திருந்த பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
02:32 PM - ரணில் விக்கிரமசிங்க பிரதமரால்  2001ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டுவரை பொருளாதார வேகம் நல்ல மட்டத்தில் இருந்தது.
02:31 PM - 2001ஆம் ஆண்டு விவசாயப் பொருளாதார மேம்பாடு அதிகரித்திருந்தது.
02:30 PM - பயங்கரவாதச் செயற்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் சீர்குலைந்திருந்தது.
02:30 PM - ரணசிங்க பிரேமதாஸ, லலித் அத்துலத்முதலி, ரொணில் டி மேல் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மிக விசேடமான அரசியல் பாத்திரங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நல்வழிப்படுத்தினர்.
02:28 PM - இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன, பொருளாதாரக் கொள்கையினூடாக 1977ஆம் ஆண்டு திறந்த பொருளாதாரத்துக்குள் நுளைந்தோம்.
02:26 PM - எங்களுடைய பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
02:25 PM - காணி, வீடு மற்றும் சுகாதாரப் பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
02:24 PM - நீண்டகால பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முக்கியமாக பொருளாதார அடித்தளம் அத்தியாவசியமாகும்.
02:23 PM - எதிர்காலச் சந்ததியினர் அனுபவிக்கக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம்.
02:21 PM - கடந்த 10 மாதங்களில் இலங்கையின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டது.
02:18 PM - சர்வதேச சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
02:18 PM - இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் சர்வதேச நாடுகளிலிருந்து நல்லாட்சிக்கு பாரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
 

02:18 PM - எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம்.

 

02:17 PM - ஜனவரி 08ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், இந்நாட்டின் திருப்புமுனை.
 

02:17 PM -  நாட்டின் 20 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பிக்கின்றேன்.
 

01:56 PM - நிதியமைச்சர் சமூகமளித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேச சம்மேளனம் அமைக்கப்பட்டது...

ஆனந்த் பிரேம்ஸ்...
சமூகசேவைகள் திணைக்களத்தின் தேசிய முதியோர் செயலகத்தின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூகசேவைகள் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளுக்கான பிரதேச சம்மேளனம் அமைக்கும் வைபவமும் அச்சம்மேளனத்தின் நிதி முகாமைத்துவம் மற்றும் முதியோர் சுகாதார மேம்பாடுகள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று (20) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்றன.

Thursday 19 November 2015

வாகன விபத்தில்...

Displaying IMG_20151120_115607.jpgDisplaying IMG_20151120_115607.jpgஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சாகாமம் வீதியின் கோளாவில் தீவுக்கலை சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த இருவரும் சாரதியும்  சிறுகாயங்களுடன்  தெய்வாதினமாக உயிர் தப்பினர்

Wednesday 18 November 2015

கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய சூரசம்காரம்..


கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய சூரசம்காரம்..


பிரான்ஸின் சென்ட் டெனிஸ் பகுதியில் குண்டுவெடிப்பு......


பிரான்ஸின் வடக்கு நகரான சென்ட் டெனிஸ் பகுதியில் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரியளவு வெடிப்புச் சத்தங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்குள்ள சி.என்.என் செய்தியாளரின் கருத்தின்படி, 5 அல்லது 6 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளிவரும் தகவல்களின் அடிப்படையில், அங்கு ஒழிந்திருந்ததாகக் கருதப்படும் ஆயுததாரிகளைத் தேடி பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் குறைந்தது 3 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதில், தற்கொலைதாரிகள், தங்களைத் தாங்களே வெடிக்க வைத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், உத்தியோகபூர்வமான தகவல்களெவையும் வழங்கப்படவில்லை.

தங்கநகை மோசடி

தங்கநகையெனக் கூறி பித்தளை நகையை 04 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 04 பேரை எதிர்;வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில்  பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்;ந்த பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அம்பாறையைச் சேர்;ந்த ஒருவரையும் ஹேமாதகமயைச் சேர்ந்த ஒருவரையும் அநுராதபுரத்தைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்

நிறைவேற்று அதிகாரம் நீக்குவதற்கு நீக்குவதற்கு..

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், புதிய தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்குமான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை நீக்குவதற்கு வழங்கியுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Tuesday 17 November 2015

விபத்து

அம்பாறை, அட்டாளைச்சேனை லக்கிஸ்டோர் சந்தியில்  இன்று செவ்வாய்க்கிழமை சைக்கிளும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் சென்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,மோட்டார் சைக்கிளில் சென்றவரும் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.சுக்கூர்(வயது 65) என்ற வயோதிபரே இவ்வாறு படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். குறித்த வயோதிபர் சுகயீனம் காரணமாக அட்டாளைச்சேனை அரசினர் வைத்தியசாலையில் மருந்து எடுத்துக் கொண்டு சைக்கிளில் பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே படுகாயங்களுக்குள்ளானார்.

Saturday 14 November 2015

இடி, மின்னல் தாக்கத்தினால்...

  
அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு அடை மழை பெய்துவ்நத நிலையில், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் வீடொன்றின்  சமையலறையின் கூரை, மின்மானி உள்ளிட்டவை சேதமடைந்தன.  
மேலும் அருகில் அமைந்துள்ள மற்றுமொருவரின் வீட்டின் மின்னிணைப்பிற்கான பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம உத்தியோகத்தர் அ.சுபராஜ் சேதங்களை பார்வையிட்டதுடன், அக்கரைப்பற்று பொலிசாருக்கும் மின்சார சபையினருக்கும் தகவல்களை தெரிவித்தார்.

மர்மப்பொருள் வானிவேயே வெடித்து சிதறிவிட்டதா....

இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த றுவு 1190கு எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் வானிவேயே வெடித்து சிதறிவிட்டதாக இலங்கை கோளரங்கம் அறிவித்துள்ளது.   காலியிருந்து 65 கடற்மைலுக்கு அப்பால் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட  மர்மப் பொருளின் ஒருபகுதி தங்காலை வான்பரப்பில் தீப்பிழம்பை கக்கி வெடித்து சிதறிவிட்டதாக வானில் விமானத்தில் இருந்து கொண்டு கண்காணிக்கின்ற கல்ப் கண்காணிப்பு குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோளரங்கம் அறிவித்துள்ளது. அந்த கண்காணிப்பு குழுவினால், ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இருக்கின்ற விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடித்து சிதறிய மர்மப்பொருளின் சிதைவுகள் கடலில் விழவில்லை என்றும் அந்த கண்காணிப்பு குழுவினர் உறுதிப்படுத்தினர் என்று கோளரங்கம் அறிவித்துள்ளது. WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்து. அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Friday 13 November 2015

சட்டவிரோதமாக சொட்கண் துப்பாக்கி...


Aசட்டவிரோதமாக சொட்கண் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் 03 தோட்டாக்கள், ஒரு வெற்றுத்தோட்டாவையும்  வைத்திருந்த குற்றச்சாட்டில்  குருக்கள் ஒருவர் உட்பட 04  பேரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டுப் பிரதேசத்தில்  நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களினுள் குருக்கள் ஒருவருடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மற்றுமொருவரும் அடங்குகின்றனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து  வாகனங்களை சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது, முச்சக்கரவண்டியில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் சொட்கண் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தும் 03 தோட்டாக்கள், ஒரு வெற்றுத்தோட்டாவையும் அம்முச்சக்கரவண்டியும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

Thursday 12 November 2015

விரத அடியாருக்கு காப்பு வழங்கல்

கேதார கெளரி விரதத்தின் இறுதினாளான இன்று (11) 


அம்பாறை  ஆலையடிவேம்பு பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் பிரதம குரு சிவஸ்ரீ மூர்த்தீஸ்வரக் குருக்களினால் விரத அடியாருக்கு
காப்பு வழங்கப்படுவதினையும் கலந்து கொண்ட பக்த்தர்களில் ஒரு பகுதியினரையும்  கானலாம் 

Wednesday 11 November 2015

சடலம் மீட்க்கப்பட்டுள்ளது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட   பனங்காடு பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (11)  மீட்க்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்க்கப்பட்டவர் பனங்காடு வைத்தியசாலை 04ம் குறுக்கு வீதியில் வசிக்கும் 22 வயதுடைய நடராசா சேனாதிசுதன் (933583183 v) என ஆரம்பக்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் மக்கள் வங்கிக்கு அருகாமையில் இன்று புதன்கிழமை நண்பகல்  இரண்டு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் பகுதியில் இருந்து தம்பிலுவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிலும் திருக்கோவில் முருகன் ஆலய வீதியில் வந்த மோட்டார் சைக்கிலுமே இவ்வாறு மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் காயமடைந்த இருவரும் திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Monday 9 November 2015

தித்திக்கும் தீபத்திருனாள் இன்று...





ஜப்பசி மாதம் தேய்பிறை சதுர்தியில் உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபத்திருநாளாகும்

இத் தினம் பண்டிகை என்பதற்கு அப்பால் மிக புனிதமாக இறைவனை பிரார்த்திக்கும் தினம் என்றும் இத்தினத்தில் உபவாஷமிருந்து விஷ்னுனாமங்கள் ஜெபித்து விஷ்னு தரிசனம் செய்வோருக்கு வைகுண்ட மோட்ஷம் கிடைக்கும் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது


பண்டிகை நாட்கள் சமுக ஒற்றுமைக்கும் கலை கலாச்சார வெளிப்பாடுகளுடன் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும்
மகிழ்சியாக இருத்தல் போன்றதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது


இன்றைய நாளில் தீமைகள் என்னும் இருள் அகன்று உலகெங்கும் நண்மைகள் நிறைந்த பக்திப் பேரொளியைப் பெற  தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உங்கள் வாழ்த்துக்களும் இப் பகுதியில் இடம் பெற "அனுப்பி வையுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்"
 sms / mms / viber / whatsapp........   +94777514279

மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு...

ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில்  தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 11 பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (09) இன்று  திங்கட்கிழமை அதிபர் கே.ஜெயந்தன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில்  இடம் பெறுகின்றது