Friday 29 May 2015

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.மதிதயன் சுட்டுகொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் ஆர்ப்பட்டமொன்று நேற்று வியாழக்கிழமை(29) முன்னெடுக்கப்பட்டது. சமூக சேவை திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்கள் அக்கறைப்பற்றில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்துக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். 'கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து' என்ற தொனிப் பொருளில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில்,  அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

No comments: