Sunday 17 May 2015

அணிக்கு 11 பேர் கொண்ட 10ஓவர்கள் கொண்ட ஆர்.பீ.எல். மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி சம்பியனாக றோயல் சலஞ்சஸ் அணியினர் தெரிவாகினர்



தம்பிலுவில்  றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கரையோர பிரதேச விழையாட்டுக் கழகங்களை ஒன்றினைத்து அணிக்கு 11 பேர்  கொண்ட 10ஓவர்கள் கொண்ட  ஆர்.பீ.எல். மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் றோயல் சலஞ்சஸ் அணிக்கும் நைற்றேடஸ் அணியினருக்கிடையில் இடம் பெற்றது

இவ் நிகழ்வில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய  றோயல் சலஞ்சஸ் அணியினர் 81ஓட்டங்களை பெற்றிருந்தனர் இதனை எதிர்த்து ஆடிய நைற்றேடஸ் அணியினர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்களை மட்டும் பெற்று றண்னராக தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் வெற்றி சம்பியனாக றோயல் சலஞ்சஸ் அணியினர் தெரிவாகினர்

அபிலன்          - மேன் ஓப்த மெச் விளையாட்டு வீரராகவும்
தினுஷந்தன் - மேன் ஓப்த கிறாஸ் விளையாட்டு வீரராகவும்
அபிலன்     - பாஸ்டர் பிப்டி விளையாட்டு வீரராகவும்
இராச்பவன்  - ஹெட்றிக் விளையாட்டு வீரராகவும்

நிலோஸ் மற்றும் கவிதாஸ் வளந்து வரும் விளையாட்டு வீரர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்

7 அணிகள் மோதிக் கொண்ட இப் போட்டி தொடர்சியாக 4 தினங்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

No comments: