கிழக்கு மாகாண சமுக
சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பார்வைத்
திறன் குறைந்த முதியோருக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு இன்று (27)
காலை ஆலையடிவேம்பு பிரதேச சமுக பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
Thursday 27 July 2017
Wednesday 26 July 2017
ஆலையடிவேம்பில் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டு பயிற்சி நிலையம் திறந்துவைப்பு
அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தர்மசங்கரி மைதானத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நான்கு மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டுப் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று
(26) மாலை இடம்பெற்றது.
Sunday 23 July 2017
Saturday 22 July 2017
Friday 21 July 2017
Thursday 20 July 2017
Wednesday 19 July 2017
Monday 17 July 2017
விபத்தில் இளைஞன் பலி
(ஷமி மண்டூர்)
வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியுடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முருகேசு-தனுஜன் (15) மற்றும் தினேஸ்(15) ஆகிய இருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் இருவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் முருகேசு-தனுஜன் (15) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தினேஸ்(15) என்பவர் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலுதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது
தும்பங்கேணி திக்கோடை பிரதான வீதியுடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முருகேசு-தனுஜன் (15) மற்றும் தினேஸ்(15) ஆகிய இருவரும் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் இருவரையும் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் முருகேசு-தனுஜன் (15) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தினேஸ்(15) என்பவர் சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலுதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
haran
Sunday 16 July 2017
பொது விளையாட்டு மைதானம்
அகமட் எஸ். முகைடீன்-
LATEST NEWS , செய்திகள் » பொத்துவில் பொது விளையாட்டு மைதானத்திற்கு பிரதியமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை
பொத்துவில் பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இனம் காணப்பட்டுள்ள பொத்துவில் சர்வோதாய புர 15 ஏக்கர் காணியை நிலஅளவை செய்து அதனை சுத்திகரிப்புச் செய்வதற்கான மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பணிப்புரையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸரத்திற்கு விடுத்துள்ளமைக்கு அமைவாக இன்று (15) சனிக்கிழமை குறித்த பிரதேசத்தை பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Saturday 15 July 2017
Thursday 13 July 2017
போதைப்பொருளற்ற ஆன்மீக அபிவிருத்தியினூடாக மகிழ்ச்சியான குடும்பங்களை உருவாக்குவது தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக
அபிவிருத்திப் பிரிவின் விழிப்புணர்வூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த புகைத்தல், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஆன்மீக
அபிவிருத்தியூடாக மகிழ்ச்சிகரமான குடும்பங்களை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலமைந்த
விழிப்பூட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் முழுநாள்
பயிற்சியாக இன்று (13) இடம்பெற்றது.
Tuesday 11 July 2017
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் குரு பூசையை முன்னிட்டு இடம்பெறும் ரத பவனி
ஈழத்துச் சித்தர்கள் வரிசையில் ஸ்ரீ நவநாத சித்தர் மற்றும் ஸ்ரீ பெரியானைக்குட்டி சித்தர்களோடு இணைந்து முப்பெரும்
சித்தர்களில் ஒருவராகக் கொள்ளப்படுபவரும், பாரத தேசத்தின் தென்னிந்தியாவிலுள்ள
இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி இராச்சியத்தின் சிற்றரசரின் மகனாக கோவிந்தசாமி
எனும் இயற்பெயருடன் அவதரித்து ஈழத் திருநாட்டின் கிழக்கே அப்போது மட்டக்களப்பு
மாவட்டத்தின் இந்துக் கலாசாரம் கோலோச்சியிருந்த முல்லை, மருதம், நெய்தல்
நிலங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் காரைதீவு கிராமத்தில் தமிழ் வளர்த்த
சைவப் புலவர் விபுலானந்த அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது ஆத்மீக நண்பராக
இருந்தவரும், பதினெண் சித்தர்களில் ஒருவரான ஸ்ரீ போகர் சித்தரின் அவதாரமாக
வந்துதித்து காரைதீவில் குடிகொண்டு சித்துக்களாலும் அற்புத லீலைகளாலும் சைவம்
வளர்த்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகள் ஜீவ சமாதியடைந்த 66 ஆவது ஆண்டு நிறைவையும்
குரு பூசையையும் முன்னிட்டு காரைதீவிலுள்ள சுவாமிகளது ஜீவ சமாதி ஆலயத்திலிருந்து
கிழக்கிலங்கையின் சைவப் பெருமக்கள் செறிந்து வாழும் அட்டப்பள்ளம், திராய்க்கேணி,
ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காடு, கண்ணகிகிராமம் பிரதேசங்களினூடாக இன்று (11) நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் மாபெரும் சித்தர் ரத பவனியை ஆலையடிவேம்பு
பிரதேசத்துக்கு வரவேற்கும் சிறப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில்
இடம்பெற்றது.
Thursday 6 July 2017
Wednesday 5 July 2017
ஊடக பயிற்சிப் பட்டறை
haran
(துறையூர் தாஸன்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊடகப்பிரிவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயமும் இணைந்து,மட்டு அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான இரு நாள் வதிவிட ஊடக பயிற்சிப் பட்டறை,மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில்,கடந்த இரு நாட்களாக(04,05) இடம்பெற்றது.
ஊடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு,பத்திரிகை செய்தி வகைகள்,பத்திரிகைகளுக்கான விசேட கட்டுரைகள்,செய்திகள் எழுதுதல் தொடர்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறவிப்பாளரும் லேக் ஹவுஸ் நிறுவன சிரேஸ்ட ஊடகவியலாளருமான விசு கருணாநிதியினாலும் வானொலி தொலைக்காட்சித் துறைகளின் வரலாற்று பரிணாம வளர்ச்சி மற்றும் இலங்கை வானொலித் துறையின் வரலாறு சார்ந்து இலங்கைத் தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் முதல் நாள் செயலமர்வை, கலந்துரையாடல் குழுச் செயற்பாடு பாங்கில் முன்னெடுத்திருந்தனர்.
ஊடகத்துறை வரலாறும் பரிணாம வளர்ச்சியும் ஊடகவியல் மற்றும் செய்தியாளர்களின் கடமைகள்,செய்தி அறிக்கைப்படுத்தல் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ.எல்.மப்ரூக் மற்றும் தொலைக்காட்சி,வானொலி ஊடகங்களில் மொழிப் பயன்பாடு மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான நசீர் எம்.அகமட் ஆகியோர் இரண்டாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வை வழிநடத்திச் சென்றனர்.
நிருபராக மாத்திரமன்றி தரமான சிறந்த ஊடகவியலாளர்களையும் நெறிமுறை சார் ஊடக கலாசார தர்மத்தை பேணும் நோக்கில்,அடிப்படை பயிற்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளின் ஏனைய கலை கலாசார ஆற்றல்களையும் இதன்போது இனங்காண முடிந்தது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஊடகப்பிரிவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயமும் இணைந்து,மட்டு அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான இரு நாள் வதிவிட ஊடக பயிற்சிப் பட்டறை,மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் விவசாய பயிற்சி நிலையத்தில்,கடந்த இரு நாட்களாக(04,05) இடம்பெற்றது.
ஊடகப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றுனர்களாக கலந்துகொண்ட இளைஞர் யுவதிகளுக்கு,பத்திரிகை செய்தி வகைகள்,பத்திரிகைகளுக்கான விசேட கட்டுரைகள்,செய்திகள் எழுதுதல் தொடர்பாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறவிப்பாளரும் லேக் ஹவுஸ் நிறுவன சிரேஸ்ட ஊடகவியலாளருமான விசு கருணாநிதியினாலும் வானொலி தொலைக்காட்சித் துறைகளின் வரலாற்று பரிணாம வளர்ச்சி மற்றும் இலங்கை வானொலித் துறையின் வரலாறு சார்ந்து இலங்கைத் தமிழ் ஓசை வானொலி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம் ஆகியோர் முதல் நாள் செயலமர்வை, கலந்துரையாடல் குழுச் செயற்பாடு பாங்கில் முன்னெடுத்திருந்தனர்.
ஊடகத்துறை வரலாறும் பரிணாம வளர்ச்சியும் ஊடகவியல் மற்றும் செய்தியாளர்களின் கடமைகள்,செய்தி அறிக்கைப்படுத்தல் தொடர்பாக சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ.எல்.மப்ரூக் மற்றும் தொலைக்காட்சி,வானொலி ஊடகங்களில் மொழிப் பயன்பாடு மற்றும் செய்தி வாசிப்பு தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான நசீர் எம்.அகமட் ஆகியோர் இரண்டாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வை வழிநடத்திச் சென்றனர்.
நிருபராக மாத்திரமன்றி தரமான சிறந்த ஊடகவியலாளர்களையும் நெறிமுறை சார் ஊடக கலாசார தர்மத்தை பேணும் நோக்கில்,அடிப்படை பயிற்சி மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள்கள் வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய இளைஞர் யுவதிகளின் ஏனைய கலை கலாசார ஆற்றல்களையும் இதன்போது இனங்காண முடிந்தது.
Tuesday 4 July 2017
Monday 3 July 2017
ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட உகந்தை முருகன் ஆலய வளாக சிரமதானம்
கிழக்கிலங்கையில்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்காலத்திற்கு
முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவரும்
சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை கடந்த (ஜூன்) 30 மற்றும்
(ஜூலை) 01 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றன.
Subscribe to:
Posts (Atom)