Wednesday 16 October 2013

ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

அக்கரைப்பற்று ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய அலங்காரத் உட்சவ திருவிழாவின் (16) தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொன்ட பக்தர்களையும் காணலாம்

DSC03312.JPG DSC03307.JPG

DSC03338.JPG

பெண்களுக்கெதிரான வண்முறைகள் மற்றும் தடுப்பதற்கான வளிமுறைகள்

சிறுவர்  அபிவிருத்தி மகளீர் விவகார அமைச்சினது ஏற்பாட்டில்
DSC03172.JPG

DSC03185.JPG

DSC03174.JPG


ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வே.ஜெகதீசன் தலமையில் பெண்களுக்கெதிரான வண்முறைகள் மற்றும் தடுப்பதற்கான வளிமுறைகள் தொடர்பாக  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவிகளை விழிப்புட்டும் கரந்தரங்கு வைத்தியர் திரு.நௌபர் மற்றும் சட்டத்தரனி சமீம் வழிகாட்டலில் பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

Sunday 13 October 2013

அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் நவராத்திரி கோலாகலம்

ஸ்ரீ இராமகிருஷ்ன மிசன் வித்தியாலயத்திலும்
DSC02946.JPG

DSC02945.JPG

DSC02954.JPG


இராமகிருஷ்ன தேசிய பாடசாலையிலும்
 கோளாவில் வினாயகர்  வித்தியாலயதிலும்
 பனங்காடு பாசுபதேசுவர  வித்தியாலயதிலும்



ஏனாதிநாத நாயனார் குரு பூசை நாள்

ஏனாதிநாத நாயனார் குரு பூசை நாள் சனிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ மருதயடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில்  கவியர் அக்கரைப்பாக்கியன் தலமையில் இடம்பெற்றது
DSC02925.JPG

DSC02920.JPG





Friday 11 October 2013

திவிநெகும


(உ.உதயகாந்த்)

திவிநெகும ( வாழ்வின் எழுச்சி ) மூலம் நாட்டை கட்டியெழுப்பும் தேசிய செயற்திட்டத்தில் ஐந்தாம் கட்ட ஆரம்ப நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் இன்று 11.10.2013 ஆம் திகதி காலை 10 மணி 11 நிமிட சுபவேளையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்துகொண்டு பயன்தரும் மரக்கன்றினையும் நட்டுவைத்ததுடன் , இத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் உரையாற்றினார்.

மேலும் இந் நிகழ்வில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜனாப் ஹஜாமுகைதீன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் , அக்கரைப்பற்று கிழக்கு பெரும்பாக உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர், பாடசாலை அதிபர் , சமுர்த்தி முகாமையாளர்கள், பிரதேசத்திற்குரிய கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள் .












Sunday 6 October 2013

சர்வதேச ஆசிரியர் தினம்


வாழ்த்துகின்றோம்
“கல்வியின் மூலம்  சிறந்த உலகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆசிரியர்களுக்கு விடுக்கப்படுகின்ற அழைப்பு என்பதே இம்முறை சர்வதேச ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாகும்.

யுனெஸ்கோ நிறுவனத்தினால் பிரகடனம் செய்யப்பட்ட சர்வதேச ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கையில் முதற் தடவையாக அனுஷ்டிக்கப்பட்டது.


எமது நிறுவணத்தின் சார்பாக 

 வாழ்த்துகின்றோம்



Remember all words he say
Words to make you social
Words to make you special
He is our teacher
He is our guide
Lets make him feel pride" happy teachers day"


உங்கள் விபரத்துடன் வாழ்த்துக்களையும்  இந்தப்பகுதியில் தெரிவிக்க  கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது e-mail அனுப்புங்கள்

Friday 4 October 2013

ஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு



(உ.உதயகாந்த்) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்துகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வுகள் கடந்த 28.09.2013, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.  

கொழும்பு நகரிலிருந்து 50 இளைஞர் யுவதிகளும், ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 25 இளைஞர் யுவதிகளும் இணைந்து நடைபெறுகின்ற இவ் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்வுகளை ஆரம்பிக்குமுகமாக அதிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பங்குபற்றுனர்கள் அனைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் சாகாம வீதியூடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, தேசிய கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின. 

Photo
 Photo
 

சமய அனுஸ்டானங்களைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வுகளும் இளைஞர் உறுதியுரையும் அதனைத்தொடர்ந்து அதிதிகள் உரைகளும் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகள் வரிசையில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளின் கிராமிய நடனமும் சிறுவர் நடனமும் இடம்பெற்றன.

இவ் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்ட நிகழ்விற்கு அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஜெயந்தன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் அகில விஜய ராஜபக்ஷ, மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் உமர் லெவ்வை, அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் யு.எல்.எம்.சர்ஜூன், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.இந்திரன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன், இராணுவ பிரிகேடியர்கள், ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன், மற்றும் கொழும்பிலிருந்து வருகைதந்த இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோருடன்பொதுமக்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம் நூல் வெளியீட்டுவிழா




கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த உகந்தமலை முருகன் ஆலயத்தின் சைவப்புலவர். சைவசித்தாந்த பண்டிர்,சோதிடர் .சிவஸ்ரீ.லோகநாதக் குருக்கலால் இயற்றப்பட்ட  உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம் எனும் நூல் வெளியீட்டுவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஆலய திருப்ணிச் சபை செயலாளர் கே.சிறிபஞ்சாடசரம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இவ் நிகழ்வில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், லாகுகல பிரதேச செயலாளர்,எல்.ஏ.சோமரத்தின, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், திருக்கோவில் பிரதேச செயலாளர், எம்.கோபாலரெத்தினம், ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வே.ஜெகதீசன்,காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன். ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியீடுசெய்யவுள்ளனர் என ஆலய வண்ணக்கரும் திருப்பணிச் சபையினரும் தெரிவித்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் வேட்டையாட சென்ற 7 பேர் கைது ! துப்பாக்கி மீட்பு


 திருக்கோவில், வட்டமடு மேச்சல்தரை பிரதேசத்தில் வேட்டையாட முற்பட்டதாகக் கூறப்படும் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி ஒன்றும் 9 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்படி 7 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி மற்றும் 9 தோட்டாக்களுடனும் சந்தேக நபர்கள் 7 பேரும்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேரையும் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


Wednesday 2 October 2013

"விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்கள்"




சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப். அசாருதீன் அவர்களது தலைமையிலும் மனித அபிவிருத்தி தாபனத்தின் அனுசரணையுடனும் 02.10.2013, புதன்கிழமையன்று சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பான சமுக விழிப்புணர்வினைக் கருப்பொருளாகக்கொண்ட வீதி நாடகங்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றன.







இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களும், பிரதேச பொதுமக்களும் இவ் வீதி நாடகங்களை கண்டுகளித்ததுடன் அவை தொடர்பான தமது கருத்துக்களையும் நாடகக்குழுவினரோடு பகிர்ந்துகொண்டனர்.

இதுபோன்ற நாடகங்கள் குறிப்பிட்ட நாளில் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களிலும் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.