Saturday 29 December 2018

பல்கலைக்கழகங்களக மாணவர்களுக்கான பாராட்டு விழா

பல்கலைக்கழகங்களக மாணவர்களுக்கான பாராட்டு விழா (30)




ஆலையடிவேம்பு பகுதியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாராட்டு விழா ன்று   ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலையடிவேம்பு கலாச்சார நிலையத்தில்   நடைபெறவிருக்கிறது. 

கஞ்சா கோப்பி விற்பனை



கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று  மாலை 06 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wednesday 26 December 2018

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் இதய பூர்வமான அஞ்சலிகள்.

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எனது இதய பூர்வமான அஞ்சலிகள்.



இலங்கை வாழ் மக்கள் சுனாமி என்ற கடல் அரக்கனின் அழிவுகளை 2004ல் கண்டு அனுபவித்து விட்டோம் எதிர்காலத்தில் இன்றைய காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் இயர்கை அழிவுகளில் இருந்து  மக்களின் உயிர்களை காப்பாற்றுகின்ற நடவடிக்கைகளை ஆட்சி செய்கின்ற மக்களின் அரனான அரசுகள் முன்னெடுக்க வேண்டும் இதற்கு சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்வது அவசிய நடவடிக்கையாகும்

Saturday 15 December 2018

வன்முறையை இல்லாதொழிப்போம்


பா.மோகனதாஸ்

பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிப்போம் பதினாறாம் நாள் செயற்திட்டத்தில்
சுவரொட்டிகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தும் நிகழ்வு, கல்முனை பூராகவும் நேற்று(14) இடம்பெற்றது.

Wednesday 12 December 2018

வான் ஒன்றில் 4 அரை கிலோ கஞ்சா



மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்துக்கு வான் ஒன்றில் 4 அரை கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

Sunday 9 December 2018

விபத்தில் ஒருவர் பலி



மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு


அனர்த்தங்களின் போது வைத்தியசாலை அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு (7) (வெள்ளிக்கிழமை) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

Friday 30 November 2018

, இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று,  வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Thursday 22 November 2018

அக்கினி விளையாட்டுக் கழக பொதுக் கூட்டம்

அக்கினி விளையாட்டுக் கழக பொதுக் கூட்டம் இன்று பனங்காடு பாசுபதே சு வரர் வித்தியாலயத்தி ல் இடம் பெற்ற போது கலந்து கொண்ட உறுபபினர்களையும் தலைவர் ரவிச்சந்திரன் உரையாற்று வதையும் படத்தில் காணலாம்




haran

Sunday 18 November 2018

பல்துறைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கலாசார பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கலைஞர் சுவதம் 2018'  கௌரவிப்பு நிகழ்வுக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சார்ந்த பல்துறைக்கலைஞர்கள் 10 பேர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பொது மயான சிரமதானம்

சிரமதானம் நாளை 20ம் திகதி 


"நாம் வசிக்கும்  சூழலை தூய்மையாக வைத்திருப்போம்"  எனும் 
தொனிப்பொருளின் கீழ்   ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்தி  உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில்பொது மயானத்தினை சிரமதானம் செய்வதற்கான ஏற்பாட்டு பணிகள் இடம் பெறுகின்றன
பிரதேச சபையின் அனுமதியுடன்  ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின்  அனுசரணையுடன் நாளை  (செவ்வாய்க்கிழமை) பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. 

Thursday 15 November 2018

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு




வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆணைக்கட்டு பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 19 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஜா புயல் தற்போது

கஜா புயலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் தற்போது சென்னைக்கு கிழக்கே 490 கி.மீ.தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 580 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

Saturday 3 November 2018

தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன்

க.விஜயரெத்தினம்
கிழக்குத் தமிழர்களின் இருப்புக்கும், அரசியல் ரீதியான அபிலாஷையுடன் கூடிய எண்ணத்துடன், தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுள்ளேன் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எஸ்.வியாளேந்திரன் (அமல்) தெரிவித்தார்.


கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சராக பதவியை பொறுப்பேற்றமை குறித்து, இன்று (3) அவரை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவரை இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நான் கிழக்குத் தமிழர்களின் நிலைப்பாட்டையும், கிழக்குத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும், தமிழர்களுக்குத் தார்மீக நோக்கத்துடன் நல்லது செய்யவேண்டும்.
“தமிழ் மக்கள்மீது வைத்துள்ள தூரநோக்குடைய சிந்தனையின் அடிப்படையில்தான், நான் நாடாளுமன்றப் பதவியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவியை ஏற்றுள்ளேன்.
“மாறாக கதிரையை சுடாக்கி வைப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது” என்றார்.
“இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில் தெளிவான சூழ்நிலையில் தமிழர்களை பல்வேறுபட்ட விடயங்களில் தீர்வுபெற்றுக்கொடுப்பதற்கும், அமைச்சுப்பதவியை பாரமெடுத்துள்ளேன்.
“பலர், இதைத் துரோகம் என்கிறார்களே. நான் எப்படி தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்துள்ளேன். தமிழரின் காணிகள் ஏனைய சமூகத்தால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்படும் போது, தன்னம்தனியாக குரல் கொடுத்தேன். அப்போது இருந்த ஏனைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
“இன்று வரை மட்டக்களப்பில் காணி பிடிக்கப்பட்டுக்கொண்டே கொண்டிருக்கின்றது. தமிழர்களின் காணிகளை யார் தடுப்பார்? காரணம் தமிழர்கள் மத்தியில் சாணாக்கியமுள்ள அரசியல் பலமில்லை.
“புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை வலுக்கட்டாயமாக அரசியல் பலத்தின்மூலம் அமைத்த போது, தனியாக நின்று, நானே எதிர்த்தேன். அப்போது ஏனையவர்கள் எங்கே போனார்கள்? கிழக்கில் இருந்தவர்கள் ஏன் இவ்விடயத்தில் மெளனமானர்கள்?
“எதிர்கட்சித் தலைவருக்கு இல்லாத அதிகாரமா? ஏன் மெளனம் காத்தார்கள்? ஒரு சத்தமிட்டாலே, நாடாளுமன்றம் கேட்கும் என்றால் ஏன் கேட்கவில்லை? மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நன்மைக்காகவும், இருப்புக்காகவும் ஜனாதிபதியிடம் தனியாகவும், எதிராகவும், நான்தான் மகஜர் கொடுத்தேன்.
“இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புலப்படாது. எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் நிதானமாக சிந்தித்து செயற்படவேண்டும்.
“வரும் அரசாங்கத்தை எதிர்ப்பார்கள். ஆனால், வரவு – செலவுத் திட்டம், நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு ஆதரவு கொடுப்பார்கள். இது தமிழ்மக்களுக்குச் செய்யும் துரோகமில்லையா?
“நான், அமைச்சு பதவி எடுத்தது எனது குடும்பத்துக்கல்ல. கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது.
“தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்தி என்பதே இல்லை. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்ட நிதிகளில் ஒரு கிராமத்துக்கு ஒரு இலட்சம் , ஐம்பதினாயிரம் மட்டும்தான் ஒதுக்கமுடியும். ஏனைய சமூகத்துக்கு கோடிக் கணக்கில் அபிவிருத்திக்கு ஒதுக்கின்றார்கள்.
“இதற்காக நான் பல அமைச்சுக்களிடம் கை ஏந்தி அபிவிருத்திகள் செய்தேன். காரணம் தமிழ் மக்களின் தேவைப்பாடு இவ்வாறு காணப்படுகின்றது. மாகாணசபை, நகர சபைகள், பிரதேச சபைகள் என்பன  தாரை வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத் துரோகமில்லையா? இதற்கெதி​ராக நான் மட்டும்தான் குரல் எழுப்பினேன்.
“படித்த தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லை. வேலை கொடுப்பதற்கு அரசியல் பலமில்லை. மாற்று சமூகத்தில் உள்ளவர்களிடம்தான் பணத்தை கொடுத்து வேலையைப் பெறவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள்.
“கல்வித்தராதரம் உள்ள தமிழ் உத்தியோகத்தர்கள், அரசியல் பலமின்மையால் தட்டிக்கழிக்கப்படுகின்றார்கள். திணைக்களங்களில் நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை தட்டி கேட்கவும், நியமிக்கவும் பலமில்லை.
“இதற்குத்தான் அமைச்சுப் பதவி தேவையாகவுள்ளது. ஒட்டு மொத்தத்தில் எதிர்க்கட்சிப் பதவியில் இருப்பதை விட அமைச்சுப் பதவி எடுத்து வேலைத்திட்டங்களைச் செய்வது சிறப்பானதாகும்.
“நான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றதில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் எதுவிதக் குழப்பமும் அச்சமும் கொள்ளத்தேவையில்லை. நான் உங்களுக்கு நல்லதைச் செய்யவுள்ளேன்.
“வடக்கு மாகாணத்தில், இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாணத்தின் அரசியல் தலைமைகள் முன்னுதாரணமாக செயற்படுகின்றார்கள். அதேபோன்று, கிழக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் முனைப்புடன் செயற்படும் நம்பிக்கை உள்ளது” என்றார்.

Monday 29 October 2018

மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்

மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்  


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் ஜனவரி, 2019 முதல் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு வருடகால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியினைப் பயிலுவதற்காகத் தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Wednesday 17 October 2018

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 



கிழக்கு பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணித பாட கல்வி கருத்தரங்கானது ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தின் கல்வி சார் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்டது 

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்ப்பு


காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று  (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Saturday 22 September 2018

41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு




அம்பாறை, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் உள்ளக வீதி அபிவிருத்திக்காக 41 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சின்  முயற்சியின் பயனாகவே இந்நிதி பாடசாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து அமைச்சின் இணைப்பாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இத்திட்டத்திற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம், மழைக் காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்டுவந்த உள்ளக சீரற்ற பாதைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ள அபாய காலங்களில் மாணவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைக்கான தீர்வுக்காணும் விடயம் தொடர்பில், பாடசாலை நிர்வாகமும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தற்போதே இதற்கான உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
haran

Thursday 20 September 2018

ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை)பழைய மாணவர் சங்க பொது கூட்டம்

 

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரி (தேசிய பாடசாலை)யின்  பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக விசேட அங்குரார்ப்பண பொது கூட்டம்    அதிபர்   திருமதி  க.சோமபாலா   தலைமையில்  இடம் பெறவுள்ளது.

Thursday 13 September 2018

(GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில்

haran

கடந்த 2017 இல் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர (GCE O/L) பரீட்சைகளின் மீள்திருத்தப்பட்ட பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மருத்துவருக்கான மிகச் சிறந்த விருது

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி உலகெங்கிலும் உலக இயன் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ் வருடத்துக்கான Chartered Society of Physiotherapist -Sri Lanka  அமைப்பின் உலக இயன் மருத்துவ தினத்தை கொண்டாடும் நிகழ்வு கொழும்பில்  அமைப்பின் தலைமைச் செயலகத்தில்  தலைவர் இயன் மருத்துவர் ஜாலிய உடுவெல்ல தலைமையில் இடம் பெற்ற து

Monday 3 September 2018

புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் ,மக்கள் நன்றி தெரிவிப்பு


வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் தொடராக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை [02.09.2018] அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

Saturday 1 September 2018



இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் 5.2 ரிச்டர் அளவிலான நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் வளிமண்டளவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

"நாட்டில் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை . வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாலை வேலைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் மழையற்ற சீரற்ற காலநிலை நிலவும்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை காணப்படும். சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பிரதேசங்களில் இதே நிலைமை காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் கிழக்கு கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய பெய்யும். ஏனைய கடற் பிரதேசங்களில் மழையற்ற சீரான வானிலை நிலவும். எனினும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேச கடற்பகுதிகளில் கொந்தழிப்புடன் காணப்படும்" என்றார்.
இலங்கையின் தென்மேற்கு கடற் பிரதேசத்தில் நிலநடுக்கம் ! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

Friday 31 August 2018

பிரதி அமைச்சர் பைசல் காசீம் ,மக்கள் நன்றி தெரிவிப்பு


அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்குவதற்கு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Thursday 30 August 2018

ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday 29 August 2018

ஜேர்மன் வாழ் உறவுகளினால் போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள்


கடந்த 14 ஆம் திகதி  மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பது

ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்

காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.

Monday 27 August 2018

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில்

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில் .


அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி கிராம மக்கள், குடிப்பதற்காவது தமக்குத் தண்ணீர் வழங்குமாறுகோரி, வீதியில் அமர்ந்து இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிமறித்துத் துரத்தித் தாக்கிய காட்டு யானை


மட்டக்களப்பு பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியில் காட்டு யானை வழிமறித்துத் துரத்தித் தாக்கியதில் அப்பகுதியில் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்த தாயும் மகனும் படுகாயமடைந்து

Sunday 26 August 2018

களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல)


களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல) ஒன்றை அமைத்து தருவதாக சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம்  உறுதியளித்துள்ளார். 


பட்டிருப்பு தொகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான பாமர  மக்களின் நன்மைகருதி 

யானை பலி

(சியாத் அகமட் லெப்பை)
 வெடிமருந்து உட்கொண்டமையினால் யானை  பலி


பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொத்துவில் கிராம நிலதாரி பிரிவு 19 பூவரசந்தோட்டம் எனும் பகுதியில்  நேற்று(26)  யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

Saturday 25 August 2018

குறைந்து வரும் தமிழர்களின் இனவிருத்தி


க. விஜயரெத்தினம்)

கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் இனவிருத்தி வீதாசாரம் குறைவடைந்துள்ளது.
வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும்.
பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

Friday 17 August 2018

புதிதாக மதுபான நிலையம்,எதிர்த்து ஆர்ப்பாட்டம்





புதிதாக மதுபான நிலையம் திறப்பதை எதிர்த்து இன்று (17) அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குற்படட சின்னமுகத்துவாராம் பகுதியில் பொதுமக்களினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது 

Wednesday 15 August 2018

காணி மீட்புப் போராட்டம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகம பிரதேச மக்கள், தங்களது குடியிருப்புக் காணியை அரசாங்கம் விடிவித்து வழங்குமாறு கோரி, காணி மீட்புப் போராட்டமொன்றை, ராகம 40ஆம் கட்டையில் இரண்டாவது நாளாக இன்றும் (15) முன்னெடுத்தனர். 
அம்பாறை மாவட்ட காணி மீட்பு அமைப்பும்  அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Thursday 9 August 2018

மாபெரும் சிரமதானத்துக்கான அழைப்பு..


பனங்காடு வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் எதிர் வரும் 12.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலை மு. ப காலை 6.30 மணியளவில் இவ்வளவு காலமாக கவனிப்பாரற்று கிடந்த வைத்தியசாலையையும், சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்ய எண்ணியுள்ளோம்..

ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

haran

மட்டக்களப்பின் இளம் வளர்ந்துவரும் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tuesday 7 August 2018

அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள்

மூன்றாம் நாள் நிகழ்வுகளின் போது(60) அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

ஊடகவியலாளர் கருணாநிதி காலமானார்.


ஊடகவியலாளர்  தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி காலமானார்.

தமிழக செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.

Sunday 5 August 2018

இடமாற்றம்



அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக ஊவாமாகாண சபையின் பிரதிப்பிரதம செயலாளராகவிருந்த பண்டாரநாயக்க

Saturday 4 August 2018

மகுடம் சூட்டும் மங்கள விழா.


கற்றதில் வென்ற முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் மங்கள விழா 2018

யானை தாக்கி ஒருவர் பலி


அம்பாறை - தமன மரியகந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Thursday 2 August 2018

கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி


அண்மையில் கல்முனை வைத்தியசாலை முன்பாக தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி ஒருவரை கல்முனை இளைஞர் சேனை அமைப்பினரால் மீட்கப்பட்டு, கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.


மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்திற்குட்பட்ட, நெல்லூர் கிராமத்தில் சற்று முன்னர் மாலை 8 மணி வேளையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

Monday 30 July 2018

மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு பகுதியில் சிறுமிகள் தங்கும் விடுதியிலிருந்து பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாடசாலை மாணவி வேறு கிராமத்து வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Thursday 19 July 2018

கிழக்கு மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் திருக்கோவில் கல்வி வலயம் 9 பதங்கங்கள் வென்று சாதனை



கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் 6 தங்கம் அடங்கலாக 9 பதங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

Wednesday 18 July 2018

விசர் நாய் கடித்துக் குதறியதில் 12 பேர் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா வீதியில் அலைந்து திரிந்த விசர் நாயொன்று தெருவில் போவோர் வருவோரைக் கடித்துக் குதறியதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்து உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயம்


மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


வாழைச்சேனை - மியன்மடு கங்கையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.