Thursday 7 May 2015

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய உண்டியல் நேற்று (06) இரவு திருடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய உண்டியல் நேற்று (06) இரவு திருடப்பட்டுள்ளது.
திருடர்களால் ஆலயத்தின் வெளிப்புறந்தே இருந்த உண்டியல் உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது பயனளிக்கவில்லை.
இருந்தபோதும் ஆலயத்தின் உள்புறத்தே வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உண்டியல் அறையொன்றினுள் வைக்கப்பட்;ட நிலையில் அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு உண்டியலுடன் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆலய நிருவாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றுமுன்தினம் பட்டிநகர் கண்ணகிஅம்மன் ஆலயத்தின் உண்டியலும் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: