Friday 17 October 2014

தனவந்தர் ஒருவரினால் பாடசாலைப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு

அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தனவந்தர் ஒருவரினால் பாடசாலைப் பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் இன்று (11) காலை நடைபெற்றது.
Displaying P1070446.JPG

Displaying P1070453.JPG 
Displaying P1070463.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸின் வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் அவரது நண்பரும், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கோளாவில் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும் தற்போது ஜேர்மனியில் குடியுரிமை பெற்று அந்நாட்டின் Braunenstr நகரில் வசிப்பவரும், Aalen நகரில் தொழில்புரிபவருமாகிய தில்லைநாயகம் முரளிதாசன் என்ற தனவந்தரால் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 17 விசேட தேவையுடைய மாணவ மாணவிகளுக்கு இவ்வன்பளிப்புகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் குறித்த பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம், விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி, ஆசிரியை பி.தீபரேகா மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்பு உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது உரையாற்றிய பாடசாலை அதிபர், குறித்த தனவந்தரின் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன், இவ்வுதவியைத் தமது மாணவர்கள் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோன்று விசேட தேவையுடைய மாணவர் பிரிவின் பொறுப்பாசிரியர் வி.தயாநிதி தனது உரையில், குறித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரது முயற்சியில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் ஒரு தனவந்தரால் கடந்த வருடமும் இதேபோன்றதொரு நிகழ்வில் தமது மாணவர்களுக்குப் பாடசாலைக் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டதை நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின்கீழ் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையூடாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வறுமைக்கோட்டின்கீழ் குடிசை வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு அவ்வீடுகளுக்கு மாற்றீடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தால் கல்வீடுகளை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட முதல் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை (03) காலை இடம்பெற்றன.

Displaying SAM_3013.JPG Displaying SAM_3081.JPG
Displaying SAM_3056.JPG
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவங்களுக்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாகக் கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் கே.குணநாதனும், சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் எம்.சி.சம்சுதீன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.அமீன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, கிராம உத்தியோகத்தர் ஏ.சுபராஜ் மற்றும் திவிநெகும பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.பரமானந்தம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது வாச்சிக்குடா, கோளாவில் ஆகிய கிராமங்களில் புதிய கல்வீடுகளை அமைப்பதற்கான அடிக்கற்கள் அதிதிகளால் நட்டுவைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் அரசினால் தனக்கு ஒதுக்கப்பட்ட 30 இலட்சம் ரூபாய் நிதியில் தற்போது அமைக்கப்பட்டுவரும் இவ்வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் வீதம் தன்னால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிதி குறித்த வீடுகளைப் பூரணமாக அமைத்து முடிப்பதற்குப் போதுமானதாக இல்லாதுவிடினும் காலாகாலமாக குடிசைகளில் வசிக்கின்ற வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் பெரும் கனவான கல்வீடு என்ற ஆசையினை நிறைவேற்றும் முதல் அடியை இவ்வேலைத்திட்டத்தினூடாகத் தான் எடுத்துவைத்துள்ளதாகவும் அங்கு தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமொன்று

கடந்த ஒக்டோபர் 1 இல் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட சர்வதேச சிறுவர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட வைபவமொன்று இன்று, 13-10-2014 திங்கட்கிழமை காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.Displaying DSCN4275.JPG

Displaying DSCN4219.JPG
Displaying DSCN4232.JPG Displaying DSCN4241.JPG 
Displaying DSCN4262.JPG Displaying DSCN4271.JPG
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையோடு ஆலையடிவேம்பு பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்திற்கு பிரதேச செயலாளர் தலைமையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, திவிநெகும திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.பிரதீப், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வைபவத்தைச் சிறப்பிக்கும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்துப் பாலர் பாடசாலை சிறார்கள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஒழுங்குசெய்த கலை, கலாசார நிகழ்வுகள் அதிதிகளதும் பார்வையாளர்களதும் பலத்த கரகோஷங்களையும் பாராட்டுக்களையும் பெற்றன.
இதன்போது இவ்வைபவத்திற்குச் சமுகமளித்த அனைத்து சிறார்களுக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிதிகளால் இனிப்புப் பொதிகளும், கலை, கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றியோருக்குப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து அதிதிகளின் சிறுவர் தினச் சிறப்புரைகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Wednesday 1 October 2014

சர்வதேச சிறார்கள் தினத்தைச் சிறப்பிக்கும்....

.ஹரன்

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், 01 இல் கொண்டாடப்படும் சர்வதேச சிறார்கள் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட கொடி விற்பனை வைபவம் இன்று (01) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Displaying SAM_4544.JPG
Displaying SAM_4542.JPG

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழியங்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இம்முறை “அன்புடன் எம்மைப் பாதுகாருங்கள்” என்ற வாசகத்தோடு தயாரிக்கப்பட்ட கொடிகள் மற்றும் ஸ்டிக்கர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இக்கொடி விற்பனையினை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது அவர் முதலாவது கொடி மற்றும் ஸ்டிக்கரைப் பெற்றுக்கொண்டு குறித்த விற்பனையை ஆரம்பித்துவைத்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் பிரதேச செயலாளருக்கு கொடியை அணிவித்ததோடு, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எல்.சிபாயா றமீஸ் மற்றும் உளவள ஆலோசகர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் குறித்த கொடி விற்பனைகள் மூலம் பெறப்படும் நிதியானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான சிறுவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தவும், சிறுவர் கழகங்களின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆயுதங்கள் மீட்பு


திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் மகா வித்தியாலய வீதியிலுள்ள வீட்டிலிருந்து, 4 கைக்குண்டுகள் மற்றும் 2 துப்பாக்கி மகஸீன்கள் என்பன (30) பகல் மீட்கப்பட்டதாக, திருக்கோவில் வலய இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் வீரசிங்க தெரிவித்தார்.

வீட்டு உரிமையாளர்களிடமிருந்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த வீடானது, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முகாமாக முன்பு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.