Monday 28 December 2020

06 கோடியே 45 இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள்




அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட உலர் உணவுப்பொதி வழங்கும் நிவாரணப்பணி நிறைவடைந்துள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.

Sunday 20 December 2020

ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.



அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

Wednesday 16 December 2020

படைப்புழு தாக்கம்

தில்லைநாயகம் வாணி & வினோதினி 



அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மற்றும் மணல்சேனை பகுதிகளில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள சோளம் பயிர்கள் படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Saturday 12 December 2020

இலங்கையில் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசி: உலக சுகாதார ஸ்தாபனம்


இலங்கை சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு கொரோனா தொற்று ஒழிப்பிற்கான தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

Friday 11 December 2020

பல்கலைக்கழக பதிவுகளுக்கான கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு

 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான பதிவுகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு!


கிழக்கு மாகணத்தில முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு உ யிரிழந்துள்ளார் இதனை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Thursday 10 December 2020

Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்


Covid – 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர்மட்டம் மிகவும் ஆழமாக காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவுசெய்யுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Wednesday 9 December 2020

அரசு முஸ்லிம்களை பழிவாங்கவே உடல் தகனம் முடிவை எடுத்துள்ளது– அப்துல் ஹலீம்


முஸ்லிம்களைப் பழிவாங்கவே அரசு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடலை தகனம் முடிவை எடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் ஏற்றிக்கொள்ள கூடாது – ஆய்வு தகவல்.

குறிப்பிடத்தக்க ஒவ்வாமைகள் காணப்படும் நபர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என பிரித்தானிய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pfizer மற்றும் BioNTech நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரத்தில் கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்


நாட்டில் நேற்றைய தினம் (08) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 798 பேரில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 97 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 06 பேரும் கண்டி மாவட்டத்தில் 40 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்றில் இறுக்கமான நடைமுறைக்கு வருவதனால் பொலிஸாரும், இராணுவத்தினரும் முழு நேர கண்காணிப்பில் ஈடுபடுவர் .


சுகாதாரத்துறையினருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் கவலை தருபவையாக இருக்கின்றது.

Tuesday 8 December 2020

ஜோ பைடனால் 100 நாட்களில் 100 M கொரோனா தடுப்பூசிகள் எனும் இலக்கு நிர்ணயம்.

CORANA VIRUS

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது முதல் 100 நாட்களில் 100 மில்லியன் COVID – 19 தடுப்பூசிகள் எனும் இலக்கை நிர்ணயித்துள்ளார்.

கிழக்கில் இன்று 55 பேருக்கு கொரோனா ! அக்கரைப்பற்று - 37 ! கிழக்கில் இதுவரை 457 ஆக அதிகரித்துள்ளது .அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .


தொற்றாளர்களில் அக்கரைப்பற்றிலயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

உலகின் முதலாவது கொரோனா தடுப்பு ஊசி இன்று பிரித்தானியாவில் ஏற்றப்பட்டது. மகிழ்ச்சியில் உலகம்.

COVID-19

பரிசோதனை நடவடிக்கைகளைக் கடந்து, கோரோனா தடுப்பூசி முதல் தடவையான பிரித்தானியாவில் இன்று மாக்கிரட் கீனன் என்ற 90 வயது பெண்மணிக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது . நீதிமன்றத்தினால் தலா 2000 ரூபா அபராதம் !

திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் திருக்கோவில் பொலீஸ் பொறுப்பதிகாரி ஜெயவீர தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் வீதியில் முகக் கவசம் அணியாமல்  சுற்றி திரிந்த 15 நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எச். எம். ஹம்ஸா ஒருவருக்கு தலா 2000 ரூபா அபராதம் விதித்தார். மொத்தமாக 30,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட்து . 

தரம் குறைந்த சனிடைசர்களின் விற்பனை அதிகரிப்பு-கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர்


எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத தரம் குறைந்த தொற்று நீக்கி (சனிடைசர்கள்) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்

பிசிஆர் பரிசோதனை கட்டாயம்


அம்பாறை, கல்முனைப் பிராந்தியத்தில் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் எதிர்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் பெற்றுகொள்ள வேண்டுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்

அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள் கட்டாயம் அந்தந்த சுகாதார வைத்தியதிகாரியுடன் தொடர்புகொண்டு பிசிஆர்  பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறும் 
புதிதாக வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு பிசிஆர் சான்றிதழ் அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் வியாபாரிகளுக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் நாளாந்தம் எழுமாறாக பிசிஆர்  பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைக்கு மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், வியாபார அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.

இளைஞன் ஹெரோயினுடன் கைது





பேலியகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்த வீதி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Tuesday 3 November 2020

தாலியினை பறித்தெடுத்த திருடன்

haranதாலி கொடியினை அறுத்தெடுத்து தப்பிக்க முயற்சி செய்த திருடனை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கிய கணவன் மனைவி பிள்ளை மற்றும் தாலியினை பறித்தெடுத்த திருடன் வீதியில் பயணித்த ஆசிரியர் ஒருவர் உட்பட ஜவர் விபத்துக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.
தாலியை 

Friday 30 October 2020

மின்னலில் கணவனும் மனைவியும் பலி

haran

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

Monday 19 October 2020

நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம்

haran

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (19) நடைபெற்றது. 

நிமலராஜனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு, 20 சிட்டிகளில் சுடரேற்றி, மலரஞ்சலியும்  ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன. 

“நெல் நாற்று நடுகை”

அம்பாறை மாவட்டத்தில் அதிக விளைச்சலையும் மிக உச்சக்கட்ட பயனையும் தரக்கூடிய “நெல் நாற்று நடுகை” மூலமான நெற்செய்கையை, விவசாயிகள் மத்தியில்  விழிப்புணா்வையும் ஆலோசனையும் களப்பயிற்சிகளையும் விவசாய திணைக்களம் நடத்தி வருகின்றது.

X

Monday 12 October 2020

10 துப்பாக்கிகளை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

haran




திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத  துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவினர், 10 துப்பாக்கிகளை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிளினிக் ,மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே

haran


அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

Sunday 4 October 2020

2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05)

haran

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான 2 ஆம் தவணைக்கான விடுமுறை நாளை (05)

Saturday 26 September 2020

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம்,


தில்லை வாணி 0777039996   

பலத்த காற்றினால் 03கடைகள் சேதம், போக்குவரத்து மின்சாரம் துண்டிப்பு 

அம்பாறையில் பல பகுதிகளில் பெய்துவரும் காற்றுடனான மழையினை தொடர்ந்து கோமாரி-1 , பி- 23 கழுகொள்ள என்னும் இடத்தில் இன்று (26)மாலை.வீதியின் நடுவே சரிந்து விழுந்த மரத்தால் மூன்று கடைகள் சேதமாகின 

சிறுவன் உயிரிழந்துள்ளான்.

haran
மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ஊடக வியலாளர்கள் பயிற்றுவிப்பு

haran
ஊடக வியலாளர்கள் பயிற்றுவிப்பு 



இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps 
புலமமப்பரிசில்யற்திட்டம்.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடைவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட பயிற்சி கடந்த  11 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க ரமதா
விடுதியில்  இடம்பெற்றுறது . 











நாட்டின் பல பாகங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் 
 பிரதிநிதித்துவப்படுத்துகின் ற மூன்று இனத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 
இளம் ஊடைவியலாளர்ள் 25 பேர் குழுவில் உள்ளடங்குகின் றனர்.


MediaCorps புலகமப்பரிசில் செயற்திட்டத்தின் ஐந்தாவது
குழுவினது 
இந்த பயிற்சி நெறி இடம் பெற்றது 

 இவ் நிகழ்வில் முரண்பாட்டு கூர் உணர்வு மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஊடக பயன்பாடுகள் பன்மைத்துவ விடயத்தில் கூருணர்வு   கையடக்கத்தொலைபேசி ஊடகவியல் போன்ற பயிற்சிகள் இடம்பெற்றதுடன் ஊடக பொருட்களும் கையளிக்கப்பட்டன

. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 
 குறித்த ஊடகவியலாளர் கள்   இந்த ஐந்து நாள் பயிற்சிக்கு  முன்னர்
ஒன்லைன் (Online) மூலம்  இணைய வழி  அமர்வுகள் (Webinar) நான்கு நாட்கள் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது 

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு

haran
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு  




கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

haran

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தயாரிப்பு சொட்கண் ரக துப்பாக்கியொன்று மைதானம் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி இன்று (22) காலை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ரத்னமல தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தி இத்துப்பாக்கியை மீட்டுள்ளனர். குறித்த இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கியுடன் 6 ரவைகளும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்ட துப்பாக்கி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையம் முற்றுகை

வர்த்தக நிலையம் முற்றுகை விசேட சோதனையில் சிக்கியது பொருட்கள் 

சர்வதேச சைகை மொழி

news by........  றியானா......
சர்வதேச சைகை மொழி 2020 வாரத்தினை முன்னிட்டு யாழ்பானம்  வடமராட்சி செவிப்புல வலுவிழந்தோர் நிறுவனத்தினரால்

பொலிஸாரின் திடீர் சோதனை

அம்பாறை பிராந்தியத்தில் கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.




வியாழக்கிழமை(24)  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது ,தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை,  சம்மாந்துறை, சவளைக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து முக்கிய சந்திகள்,  பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்


haran

Wednesday 23 September 2020

பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார்!!!

Niloch


பட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார் இன்று (23.09.2020) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். தம்பிலுவில்லைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் முதல் நிலையைப் பெற்றுக் கொண்டவர் என்பதோடு அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தயாளசீலன் ஆகியோர் முன்னிலையில் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அதிபரை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்; வரவேற்று வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Sunday 6 September 2020

தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு

                       
ம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


Tuesday 1 September 2020

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
1.9.2020 முதல் 21.3.2022 வரை





1-மேஷம்
ராகுவின் பலன்கள்: இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் இருந்துகொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும் மன தைரியத்தையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுப்பது நல்லது.
கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு வீண் செலவுகளைத் தந்த கேது பகவான் இப்போது 8-ல் அமர்வதால் வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். 8-ல் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார்.
வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக்கண்டு உயர்பதவிக்கு சிபாரிசு செய்வார்.
அசுர வளர்ச்சியையும் பணவரவையும் வெற்றியையும் தருவதாக அமையும் இந்த ராகு - கேது மாற்றம்.

Saturday 22 August 2020

மகா கும்பாபிஷேகம்

மகா கும்பாபிஷேகம்





கும்பாபிஷேக நிகழ்வுகளின் விசேட அம்சமாக எண்ணைக்காப்பு சரத்தும் நிகழ்வு  25 ஆம் திகதி 11:55முதல்  26ஆம் திகதி மாலை 4 மணி வரை எண்ணைக்காப்புசார்த்தமுடியும் 

Monday 17 August 2020

தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் Alayadivembu :-


தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம்

தெரிவுசெய்யப்பட்டவர்கள் பட்டியல்

Alayadivembu : https://drive.google.com/file/d/10J9X4yHE3D5xjXiTFUArIcH3h_o6rcI-/view?usp=sharing


அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று(17) மீண்டும்

haran
கொரோனா தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று(17) மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை மாதம் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 19 July 2020

தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் - 1933

haran
தேர்தல் சட்ட மீறல்கள் இருப்பின் அழையுங்கள் -  1933




தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கென விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

Saturday 18 July 2020

தேர்தல்-3684 முறைப்பாடுகள்

haran


தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Saturday 11 July 2020

புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்


புகைப்பட ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்



ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Friday 1 May 2020

கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை

haran
(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு களப்பு பகுதியில் இன்று(01) வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் சிவராம் நினைவு தினம்

haran

கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸின் பாதிப்புகளால் உலகிலுள்ள அனைத்து மக்களும் பெரும் நெருக்கடியினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மானசீக குருவாக, பிரமிப்பாக, உந்துதலாக, ஊக்கியாக இருக்கின்ற தராகி டி. சிவராமின் 15வது ஆண்டு ஞாபகார்த்த தினத்தினை நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் எல்.ரி.அதிரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday 30 April 2020

வீட்டுத்தோட்டங்களை அமைப்போம்

haran


'சௌபாக்கியா' எனும் 10 இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அமைப்போம் எனும் தொனிபொருளில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

Wednesday 29 April 2020

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் விடு வந்தனர்

haran


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 75 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து நேற்று (28) தத்தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tuesday 28 April 2020

கொரோனா தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை

haran

(வி.சு)
கொரோனா அச்சுறுத்தல் நீங்கும் வரை அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்திலேயே சந்தை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

Friday 17 April 2020

haran

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார்.


Sunday 12 April 2020

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா

haran

(W. டிக்க்ஷித்) (பாறுக் ஷிஹான்)

அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

Wednesday 8 April 2020

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது நோயாளி பதிவு

haran

ஆர் .நடராஜன்

அம்பாறை மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளி அக்கரைப்பற்று பிரதேசத்தில்  இனங்காணப்பட்டுள்ளார்