Wednesday 13 May 2015

சட்டவிரோதமாக கடல் மற்றும் ஆற்று மண்ணை கொண்டு சென்ற இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

கடல் மற்றும் ஆற்று மண்ணை சட்டவிரோதமாக ஏற்றிய இருவருக்கு  அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல்,  கடல் மண்ணை ஏற்றியவருக்கு 25 ஆயிரம் ரூபாவும் ஆற்று மண்ணை ஏற்றியவருக்கு  15 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அனுமதிப்பத்திரமில்லாமல் சட்ட விரோதமாக கடல் மணலை ஏற்றிய நபரை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார், நேற்று திங்கட்கிழமை(11)  கைது செய்தனர். 

கடல் மண்ணை கை உழவு இயந்திரத்திலும் ஆற்று மண்ணை,  உழவு இயந்திரத்திலும் இவ்விருவரும் ஏற்றியுள்ளனர்

No comments: