Monday 29 October 2018

மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்

மாதர் அபிவிருத்தி டிப்ளோமா விண்ணப்பம் கோரல்  


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்படும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் ஜனவரி, 2019 முதல் ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு வருடகால மாதர் அபிவிருத்தி டிப்ளோமா பயிற்சி நெறியினைப் பயிலுவதற்காகத் தகைமையுள்ள யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Wednesday 17 October 2018

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு 



கிழக்கு பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் க.பொ.சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணித பாட கல்வி கருத்தரங்கானது ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக் கழகத்தின் கல்வி சார் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்  நடாத்தப்பட்டது 

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்ப்பு


காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று  (17) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.