Friday 26 June 2015

பெரிய உல்லை பகுதியில் விபத்து

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட பெரிய உல்லை பகுதியில் இன்று (26)வெள்ளிக்கிழமை  
சிறியரக டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில்  11பேர் காயமடந்த நிலையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவசர சிகிச்சைக்காக 6பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாரை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன


அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் பிரதான வீதியூடாக  உகந்தை முருகன் ஆலயத்திற்கு ஆலையடிவேம்பைச்சேர்ந்த பக்த்தர்கள் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிய வருகின்றது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: