Saturday 13 June 2015

யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில்

    அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலிக்கம்பை வயல்  பிரதேசத்தில் வைத்து யானையின் தாக்குதலுக்குள்ளான  ஒருவர் சிகிச்சைக்காக இன்று(13) காலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளானவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 57வயதுடையவர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

வயலுக்கு சென்றுவரும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளானவரின் துவிச்சக்கரவண்டி யானையினால் சுக்குநூறாக  சேதமாக்கப்பட்டுள்ளது

No comments: