Thursday 25 June 2015

போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு 7,500 ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் விற்பனைக்காக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், நேற்று வியாழக்கிழமை (25) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார்  புதன்கிழமை (24) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உ த்தரவிட்டார். 

No comments: