Wednesday 17 June 2015

6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பகுதியில் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (16)மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளை கொண்ட 6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
வாகன அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம், இலக்கத்தகடு இல்லாமை போன்ற காரணங்களினால் குறித்த சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீலின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.ஏ.கமகேயின் உத்தரவின் பேரில் போக்குவரத்து பொலிஸார் ஆங்காங்கே மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த 6 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சைக்கிள்களின் உரிமையாளர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments: