Wednesday 17 June 2015

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதல் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினார்

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கோளாவில் பிரதேசத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கால்கள் உடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பாடசாலை விட்டுவந்த கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி மீது சைக்கிளை மோதியுள்ளார். இதனால் மாணவியின் காலின் முழங்கால் கீழ்ப்பகுதி உடைந்துள்ளது.
சம்வப இடத்தில் கூடிய பொதுமக்களின் உதவியோடு மாணவி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் வேகமாக பயணிக்கும் இளைஞர்களின் தொல்லை இப்பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: