Friday 12 June 2015

அம்பாறை திருக்கோவில்-விநாயகபுரம் மகாவித்தியலய கணினி ஆய்வு கூடம் தீயில் எரிந்து நாசம்


கார்த்திகேசு, 
நிலொச் ,
 அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் கல்வி வலத்தில் உள்ள விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் கணினி ஆய்வு கூடம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்று விரைந்த திருக்கோவில் பொலிசார் திருக்கோவில் மின்சார சபையினர்  மற்றம் திருக்கோவில் பிரதேச சபையினர்   பொது மக்களின் ஒத்துழைப்புடன் இரானுவத்தினரும் இனைந்து தீப்பரவலை  கட்டுப்படுத்தியதுடன், ஆய்வு கூடத்தில் இருந்து கணினிகளையும் பொருட்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்

இத்  தீயினால் சுமார்  35க்கு மேற்பட்ட கணினிகள் மற்றம் அதன் பகுதிகப் பொருட்கள் தீயில் எறிந்து நாசமாகியதாகவும், மேல் தளத்தில் இரண்டு அறைகள் முற்றாக தீயில் கருகி நாசமாகியுள்ளது.

இவ் அனர்த்தம் சம்மந்தமான ஆரம்ப விசாரனைகளின் போது  மின் ஒழுக்கு காரணமாக தீப் பற்றி இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: