Wednesday 17 June 2015

விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏ.எம்.சரீப்டீன் (வயது 52) எனும் பொலிஸ் அதிகாரியே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பொலஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர், செவ்வாய்க்கிழமை (16) தனது கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: