Tuesday 23 June 2015

கடந்தகால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அதிகாரசபையினால் நடமாடும்சேவை

கார்த்தி...
கடந்தகால  யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு  உயிர் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்காக ஆவணங்களை ஒழுங்குபடுத்தி கோவைகளை பூரணப்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வு அதிகாரசபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேச செயலகப் பிரிவுகளில்  25ஆம் 26ஆம் திகதிகளில் நடமாடும்சேவை நடத்தப்படவுள்ளது.


 நாளை வியாழக்கிழமை (25) 
பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான  நடமாடும்சேவை  திருக்கோவில் பிரதேச காலாசார மத்திய நிலையத்தில்  காலை 08 மணியிலிருந்து  மாலை 04 மணிவரை நடைபெறவுள்ளது.


நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (26) 
கல்முனை தமிழ்ப்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, நாவிதன்வெளி,  அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நடமாடும்சேவை கல்முனை தமிழ்ப்; பிரதேச செயலகத்தில்  நடைபெறவுள்ளது.

இதன்போது,  சுமார் 800 பயனாளிகளுக்கு சேவைகளை  பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் துஷித்த பி.வனிகசூரிய தெரிவித்தார். 

No comments: