Wednesday 6 January 2016

வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உலர் உணவு..

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் அடை மழை பெய்ய ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து வெள்ளப் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு உலர் உணவுகளை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு

 அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்  அறிவித்துள்ளார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை வடிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்படும் மக்களை வேறிடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.எ.அஸீஸ், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

No comments: