Thursday 9 July 2015

“சிப்தொற” புலமைப்பரிசில்களை வழங்கிவைப்பு

பிரேம்...


ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் 2013/2015 கல்வியாண்டில் உயர்தரம் கற்கும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களப் பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 20 மாணவ, மாணவியர்களுக்கு “சிப்தொற” புலமைப்பரிசில்களை வழங்கிவைக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நேற்று (08)  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  

ஆலையடிவேம்பு பிரதேச வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள தலைமையக முகாமையாளர் கே.நேசராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு முதல் இரண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சான்றிதழ்களையும், வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கியில் பணம் பெறுவதற்கான ரசீதுகளையும் வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் விடயத்திற்குப் பொறுப்பான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.விஜயபால மற்றும் அளிக்கம்பை கிராமத்திற்கான திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாக்கியராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments: