Wednesday 22 July 2015

சந்தை கட்டடத்தொகுதியில் தீ


அம்பாறை பஸ் நிலையத்தை அண்டியுள்ள சந்தை கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு தீ பரவியதால், கடையொன்று எரிந்து நாசமாகியுள்ளது. இதனால், அக்கடையிலிருந்த சுமார் 100,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள்  எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இத்தீயினால் அருகிலிருந்த உபதபால் நிலையம் உட்பட சில வியாபார நிலையங்களும் சிறிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன. தீயணைப்புப் பிரிவினரும்; பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். தீ பரவியமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: