Wednesday 8 July 2015

தம்பட்டை விபத்தில் இராணுவ வீரர் பலி

திருக்கோவில் தம்பட்டைபிரதானவீதியில் புதன்கிழமை (08) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இவ்விபத்தில் அநுராதபுரம் நாச்சியாதீவைச் சேர்ந்த சமன் சிறி பிரேமவன்ச (48 வயது) என்ற
இராணுவவீரரே உயிரிழந்துள்ளார். பொத்துவில் பிரதேசத்திலுள்ள மரணவீடொன்றுக்கு சென்று அநுராதபுரம் திரும்பும் வழியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லொறி வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் லொறியில் முன்னால் இருந்து பயணித்த இராணுவ வீரர் உயிர் இழந்துள்ளார். குறித்த இராணுவீரரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்றபோது, லொறி சாரதி நித்திரைக் கலக்கத்தில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக தெரிவித்த பொலிஸார், லொறியின் சாரதியை கைதுசெய்ததுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

No comments: