Friday 10 July 2015

கதிர்காம பாத யாத்திரிகர்கள் சமய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும்

வி.சுகிர்தகுமார் 




கதிர்காம பாத யாத்திரிகர்கள் சமய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் வே.சந்திரசேகரம் இவ்வேண்டுகோளை பக்தர்களிடம் வினயமாக விடுப்பதாக தெரிவித்தார்.


 யாத்திரையில் கலந்துகொள்கின்றவர்கள் பொருத்தமான ஆடைகளை அணிந்துசெல்வதுடன், இறைநாமத்தை மனதில் நிறுத்தவேண்டும்.   பக்தியுடன் யாத்திரையில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். கதிர்காம காட்டுவழிப்பாதை பாதயாத்திரை நேற்று உகந்தை மலை கோவிலிலிருந்து ஆரம்பமாகியது.  இதில் 1,800 இற்கும் மேற்பட்டவர்கள் முதல் நாள் யாத்திரையில் இணைந்துகொண்டனர். 

No comments: