Saturday 11 July 2015

சிறுமி துஷ்பிரயோகம்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குண்டுமடு பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 33 வயதுடைய சந்தேக நபரை பொத்துவில் பொலிஸார் இன்று (11) கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர். 

 சிறுமியின் அயல் வீட்டில் வசித்துவரும் மேற்படி சந்தேக நபரின் வீட்டிற்கு சிறுமி கடந்த 08 ஆம் திகதி சென்றுள்ளார்.

 இதன் போதே மேற்படி சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்தக்கு உட்படுத்தியுள்ளார்.

 இவ்விடயம் குறித்து சிறுமி இன்று குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியதையடுத்தே, குடும்பத்தார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments: