Friday 10 July 2015

கஞ்சாவுடன் ஒருவர் கைது

வி.சுகிர்தகுமார் 
அம்பாறை,  அட்டாளைச்சேனையின்  06ஆம் பிரிவில்  30 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர்  ஒருவர் நேற்று வியாழக்கிழமை (09) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறையிலிருந்து வருகைதந்த விசேட பொலிஸ் பிரிவினரால்   கைதுசெய்யப்பட்ட இவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

No comments: