Monday 27 July 2015

மினி சூறாவளி

எஸ்.கார்த்திகேசு 
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை திடீரென்று வீசிய மினி  சூறாவளி காரணமாக சுமார் 15 வீடுகள் சேதமடைந்ததாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தெரிவித்தார். 

  சாகாமம் கிராமத்தில் ஒன்பது வீடுகளும் இரண்டு கால்நடைகளின் கொட்டில்களும் ஸ்ரீவள்ளிபுரத்தில்; மூன்று வீடுகளும் காஞ்சிரம்குடாவில் மூன்று வீடுகளும்  மற்றும் விநாயகபுரத்தில் ஒரு வீடும் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.   இந்த சூறாவளியின்போது மரங்கள் முறிந்து விழுந்ததுடன், வீட்டுக்கூரைகளும் காற்றினால் அள்ளுண்டுள்ளன. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின்  வீடுகளில் தங்கியுள்ளனர். இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: