Monday 6 July 2015

ஏழு கிலோ கிராம் கஞ்சா தூளுடன் கைது

அம்பாறை, பொத்துவில் பகுதியில் ஏழு கிலோ கிராம் கஞ்சா தூளுடன் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பொலிஸில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் உத்தரவு பிரப்பித்துள்ளார்.
 
மேற்படி இரு சந்தேக நபர்களும் லொறி ஒன்றில் 07 கிலோகிராமும் 370 கிராம் கஞ்சா தூளை மறைத்து வைத்திருந்தனர் என 04ஆம் திகதி பொத்துவில் பொலிஸானால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருளுள் விநியோகத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் நீதிமன்றித்திடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) அனுமதி கோரப்பட்டிருந்தமைக்கு அமைய நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
திஸ்ஸமகாராம பகுதியிலிருந்து பொத்துவில் வழியாக அக்கரைப்பற்றுக்கு மரக்கறி மற்றும் பழவகைகளையும் ஏற்றிச் சென்ற லொறியை சந்தேகத்தின் பெயரில் சோதனைக்குற்படுத்திய போதே கஞ்சா தூள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 
கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹராம பகுதிகளை சேர்ந்த லெஸ்லி அபே குணவர்த்தன மற்றும் சரத் ஆனந்த ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த கஞ்சா போதைப்பொருள் திஸ்ஸமகாராமயிலிருந்து அக்கரைப்பற்று வியாபாரி ஒருவருக்கு எடுத்துச் சென்றமை பொலிஸார் மேற்கொண்ட விசாரனையின்போது தெரியவந்துள்ளது.

No comments: