Wednesday 15 July 2015

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி 5ஆசனங்களை கைப்பற்றும்

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள 7ஆசனங்களில் ஜக்கிய தேசிய கட்சி 5ஆசனங்களை கைப்பற்றும் என ஜக்கியதேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாரை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளருமான தயாகமகே தெரிவித்தார்.
நேற்று (13) அம்பாரை மாவட்ட செயலக தேர்தல் ஆணையாளரிடம் வேட்புமனுவை கையளித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் ஜக்கியதேசிய கட்சியுடன் .இணைந்து போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆசனங்களை பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஆகஸ்ட 17ஆம் திகதி ஜக்கியதேசிய கட்சியானது அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்கும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார். வேட்பு மனுத்தாக்கலின் பின்னர் ஊர்வலம் நடைபெற்றது

No comments: