Friday 27 June 2014

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உகந்தை முருகன் ஆலய வளாக சிரமதானம்

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் வருடந்தோறும் அதன் திருவிழாக்காலத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் சிரமதான வேலைத்திட்டமும் விசேட பூஜை வழிபாடுகளும் இம்முறை வார இறுதி நாட்களான கடந்த (ஜூன்) 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது சுமார் 100 பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இச்சிரமதானப் பணியில் பங்குபற்றியதுடன் சனி, ஞாயிறு இரு தினங்களிலும் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் தொடர்ச்சியான சிரமதான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ஆலய பிரதம குருக்களால் 14 ஆந்திகதி இரவு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் விசேட பூஜை வழிபாடுகள் பிரதேச செயலாளரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டதுடன் அன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பொங்கல் மற்றும் பஜனை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவற்றில் இம்முறை கதிர்காமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்ளும் யாத்திரிகர்களும் பெருமளவில் பங்கெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
 — at Okanda

No comments: