Wednesday 18 June 2014

சுவிட்சர்லாந்து சென் மார்க்ரெத்தன் நகரில் இடம்பெற்ற ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலங்காரத் திருவிழா மற்றும் உலக முருக பக்தி மாநாடு




(சிவம்)
சுவிட்சர்லாந்து சென் மார்க்ரெத்தன் நகரில் அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலங்காரத் திருவிழா மற்றும் உலக முருக பக்தி மாநாடு என்பவற்றில் மனித நேய சேவைகள் புரிந்தமைக்காக பரசுராமன் துரைசிங்கத்திற்கு மாண்புறும் மனிதராக கௌரவமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஓய்வு பெற்ற கூட்டுறவுச் சங்க முகாமையாளரும், கிராமோதய சபைத்; தலைவரும், சமூக ஆர்வலருமான பரசுராமன் திருமஞ்சணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் துரைசிங்கம் சுவிட்சர்லாந்தில் மாண்புறும் மகனான நேசிக்கப்பட்டார்.

சென் மார்க்கிரெத்தன் ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலய தீர்;த்தோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 15 ) நிறைவு பெற்றதன் பின்னர் அறங்காவலர் சபைத் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் அவர்களினால் பரசுராமன் துரைசிங்கத்திற்கு இக்கௌரவம் அளிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments: