Tuesday 17 June 2014

மதுபோதையில் வாகன அனு­ம­திப்­பத்­தி ரம் இன்றி வாகனம் செலுத்­திய நபர்


மதுபோதையில் வாகன அனு­ம­திப்­பத்­தி ரம் இன்றி வாகனம் செலுத்­திய நபர் ஒரு­ வருக்கு 11,000ரூபா தண்­டப்­ப­ணமும், 15 நாட்கள் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் வழங்கி அக்­க­ரைப்­பற்று நீதவான் நீதி­மன்ற நீதி­பதி எச்.எம்.எம்.பஸீல் தீர்ப்­ப­ளித்­துள் ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,
அக்­க­ரைப்­பற்று பனங்­காடு பிர­தே­சத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இல்­லாமல் மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்ற போது வீதி ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த போக்­கு­வ­ரத்து பொலிஸார் கடந்த வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­தனர்.
கைது செய்­யப்­பட்ட நபர் மறுநாள் வெள்­ளிக்­கி­ழமை அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது நீதி வான் எச்.எம்.எம்.பஸீல் சாரதி அனு­மதி பத்­திரம் இல்­லா­த­தற்கு மூவா­யி­ரத்து ஐந்­நூறு ரூபாவும், மது­பானம் அருந்­தி­யி­ருந்­த­த ற்­காக ஏழா­யி­ரத்து ஐந்­நூறு ரூபாவும் அப­ரா ­த­மாக செலுத்­து­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் 15 நாட்கள் கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் விதி த்து தீர்ப்­ப­ளித்தார்.
அக்­க­ரைப்­பற்று, ஆலை­ய­டி­வேம்பு, சாகாமம் வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றபோதே அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்.

No comments: