Friday 27 June 2014

ஆலையடிவேம்பில் வீதிகளுக்குக் கொங்கிறீற் இடும் வேலைகள் ஆரம்பம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அம்பாறை மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் 18 முதல் எதிர்வரும் ஜூன் 25 வரை அனுஸ்டிக்கப்படுகின்ற அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பில் இதுவரையில் புனரமைக்கப்படாதுள்ள கிறவல் வீதிகளுக்கு கொங்கிறீற் இடும்வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (20-06-2014) அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தலைமையில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.ரி.கிருபைராஜா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள செல்லப்பிள்ளையார் வீதி, விகாரை வீதி மற்றும் அக்கரைப்பற்று – 7/3, அக்கரைப்பற்று – 7/4 கிராமப் பிரிவுகளுக்கான பொது வீதி என்பவற்றுக்கு கொங்கிறீற் இடும் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

No comments: