Tuesday 17 June 2014

அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சமுக ஒருங்கிசைவு நிகழ்வு


(சித்தா)
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் கலாசார முன்னெடுப்புகளின் ஊடாக சமுக ஒருங்கிசைவு நிகழ்வு யுனிசெவ் அணுசரனையுடன் அட்டாளைச்சேனை கல்வியற் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி ஜனாப் எம்.எச்.பஸீல் அழைக்கப்பட்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கொய்கா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளுக்pடையிலான விழாவாக இது காணப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பட்டிருப்பு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, அம்பாரை, கல்குடா, திருக்கோவில் கல்வி வலயங்களிலிருந்து மாணவர்கள் இவ் விழாவில் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகள் கலாசார நிகழ்வுகள் என சமுகத்தினை ஒருங்கிணைக்கக் கூடிய விழாவாக இந் நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது.இவ் அனைத்து நிகழ்வுகளையும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக யுனிசெவ் இணைப்பாளர் ஜனாப் எம்.எம்.ஜெமீல் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்








No comments: