Tuesday 17 June 2014

பெண்ணொருவர் மீது பாலியல் சேஷ்ட்டை


அம்பாறை நகரலிருந்து நாமல் ஓயாவுக்கு பஸ்ஸில் பயணித்துகொண்டிருந்த பெண்ணொருவர் மீது பாலியல் சேஷ்ட்டை புரிந்ததாக கூறப்படும் 22 வயது இளைஞரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா புதன்கிழமை(11) உத்தரவிட்டார்.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞர், பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவரை உரசியவாறு பயணித்துள்ளார். இவரது சேஷ்ட்டையை தாங்க முடியாத அப் பெண் இங்கினியாகலை பிரதேசத்தில் வைத்து கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்தே குறித்த இளைஞனை பிடித்த பயணிகள் அவரை நயப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இச்சம்பவத்தில் கைதானவரை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரேரா முன்னிலையில் அம்பாறை பொலிஸார் ஆஜர்படுத்தியப்போது இவரை எதிர்வரும 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: