Friday 27 June 2014

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணி மீளாய்வுக் கூட்டம்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பணி மீளாய்வுக் கூட்டமானது கடந்த 25-06-2014, புதன்கிழமை பி.ப.3.00 மணிக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது.

உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.திலகராணி கிருபைராஜா அவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஒவ்வொரு உத்தியோகத்தரதும் கடமைகள், பணிகளை நிறைவேற்றுவதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அப்பணிகளைத் தொடர்ச்சியாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் அறிவுரைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

No comments: