Wednesday 18 June 2014

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிமீது கல்வீச்சு


முல்லைத்தீவில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிமீது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் அட்டாளைச்சேனை பாலமுனை பிரதேசத்தில் வைத்து சில விஷமிகளால் கற்கள் வீசப்பட்டதாகவும் இதன் காரணமாக பஸ்வண்டியின்  கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு இன்று சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றுமொரு பஸ் வண்டி மீது இன்று(17) காலை அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக்கு முன்னால் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றதாகவும் இதனால் பஸ்வண்டியின்; கண்ணாடிகள் சேதமடைநதாலும்; பயணிகளுக்கு எதுவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர.

No comments: