Tuesday 17 June 2014

அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் மீது மன்னம்பிட்டியில் வைத்து தாக்குதல்


அக்கரைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணம் செய்தவர்கள் மீது மன்னம்பிட்டியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 9.30 அளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்மீது மன்னம்பிட்டியில் வைத்து ஒருவர் கற்களினால் தாக்குதல் நடத்தி பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.

இதன்போது பஸ்ஸின் நடத்துனருடன் பொதுமக்களும் இணைந்து குறித்த நபரை பிடித்து தாக்கியுள்ளனர்.

இந்தவேளையில் அப்பகுதியில் ஒன்றுகூடிய 25க்கும் மேற்பட்டவர்கள் குறித்த பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் சிலர் அடிகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் குறித்த பஸ்சில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கதுறுவெல பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: